Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

அறிவின் வறுமை :


அறியாமை, அலட்சியம்,உணர்ச்சிவயம் என்ற மூன்று வகையிலும் அறிவு வறுமை மக்களிடம் நிலவுகிறது.மனித குல வாழ்வில் எங்குமே அமைதியின்மையும் துன்பங்களும் , சிக்கல்களும் பெருகி இருக்கின்றன. இவற்றிற்குப் பொருள் வறுமை, அறிவு வறுமை எனும் ...இரண்டு அடிப்படைக் காரணங்களாகும் . அறிவு வறுமையில்லாத சமுதாயத்தில் பொருள் வறுமை எக்காரணத்தால் உண்டானாலும் அதனைக் குறுகிய காலத்தில் நிறைவு செய்து கொள்ளலாம்.

வாழ்க்கை அனுபவத்தில் தேர்ந்தவர்கள் கண்காணிப்பில் "அறியாமையும்",வாழ்க்கையின் உண்மை உணர்ந்து சிந்தித்துத் திட்டமிட்டுச் செயலாற்றி வாழ்வதன் மூலம் "அலட்சியத்தையும் ", இயற்கை நியதியுனர்ந்து அதையொட்டி மதித்து வாழும் பண்பால் உணர்ச்சிவய மனநிலைகளையும் சமன் செய்து கொள்ளலாம்.

அறிவு வறுமை நீங்க ஆன்மீக அறிவு அவசியம் .அறிவை அறிவால் அறியத்தக்க அகத்தவப் பயிற்சி அவசியம் .

----அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக