Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பெற்றோர் பொறுப்பு

அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளைப் பொறுப்போடு நிறைவேற்றவும், ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்ற கல்வி, ஒழுக்கம், தொழில் திறம், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. இந்தப் பொறுப்பை உடல். பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்றுங்கள். கொடூரம், விகாரம், அகோரம் உடைய படங்களை வீட்டில் எந்த இடத்திலும் மாட்டி வைக்க வேண்டாம். அன்பு, அருள், இன்முகம், கலை, இவற்றோடு கூடிய உருவப் படங்களை மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும் நல்லவர்களாக அழகு மிக்கோராகப் பிறப்பார்கள் வளர்வார்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக