Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

'உயிர் உணர்வு' பெற எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga) :

...
"எல்லோருக்கும் 'உயிர்' இருக்கின்றது. ஆனால் அதைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்? வளர்ந்து வரும் விஞ்ஞானத்திலே எல்லாப் பொருட்களைப் பற்றியும், ஆராய்ந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளாலும் உயிரை அறிய முடியவில்லை. வேதாந்திகள் கூட கடவுள் பற்றிய விளக்கம் எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் உயிரைப் பற்றிய விளக்கம் மாத்திரம் கொடுக்கவில்லை. அது மறைபொருளாகவே இருக்கிறது.
.
எனக்குச் சில டாக்டர் நண்பர்கள் தெரியும். அவர்களிடம் பேசும்பொழுது அவர்கள்., 'நீங்கள் உயிரைப் பற்றி விளக்கும் பொழுதும், உயிரிலிருந்து வருகின்ற அலையைப் (Wave Theory) பற்றிப் பேசும்பொழுதும், ரொம்பப் பொருத்தமாகவே உள்ளது. ஆனால், அதை எங்களால் நம்பமுடியவில்லையே.. ?, என்றார்கள்.
.
'நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன், 'நாங்கள், மனிதன் உயிருடன் இருக்கும் பொழுதும் சரி, இறந்த பிறகும் சரி, உடலை முழுவதும் அறுத்துப் பார்த்து விட்டோம்; எங்கும் உயிரைப் பார்க்க முடியவில்லையே ?, என்றார்கள்.
.
அதற்கு நான், உயிரை மனதைக் (Mind) கொண்டுதான் அறிய வேண்டும். அதற்கு முறையாக அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga) செய்தால்தான் விளங்கும் என்று கூறினேன்". அதற்குப் பிறகு பயிற்சி எடுத்த சில டாக்டர்கள், உயிரின் இயக்கம், அதிலிருந்து வரக்கூடிய அலையாகிய காந்த சக்தியின் இயக்கம் (Bio Magnetism), அதை மனம் (Mind) கண்காணிப்பது, இவ்வளவையும் உள்ளே அறிவு (Consciousness) பதிவு செய்து கொள்வது, திருப்பிப் பிரதிபலிப்பது, எல்லாமே உணர்ந்து கொள்ள முடிகிறது என்றார்கள்.
.
ஆராய்ச்சித் திறனும், மிக நுண்ணிய அறிவும், கூர்ந்து நோக்கும் பண்பும், உள்ள அனைவரும் இதை உணர்ந்து கொள்ளலாம். இந்த விஞ்ஞானக் கல்வியை மெய்விளக்கத் தவத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் தெரிந்து கொள்ளும்போது மிக சுலபமாகவும், எளிதாகவும் விளங்கிக் கொள்ள முடியும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
************************************************************************************
.
(பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்....
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம் .! )
-------------------------------------------------------------------
.
அன்பின் அழைப்பு :-
"பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக