Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

முதுமை வரும் காரணம்

★மனிதன் நிலவுலகத்தின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். 25,000 மைல் சுற்றளவு கொண்டு, மண், உலோகங்கள், ரசாயனங்கள் இவை அடங்கிய
ஒரு பெரிய கோளம் நிலவுலகம். அது, ஒரு மணிக்குச் சுமார் 1,000 மைல்
வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக்  கொண்டிருக்கிறது.

★சூரியனை மணிக்குச் சுமார் 66,000 மைல் வேகத்தில் வலம்  வந்து கொண்டிருக்கிறது. தன்னைத் தானே சுற்றும் வேகத்தால், எந்தக்  கெட்டிப் பொருளையும் மையத்தை நோக்கி இழுக்கும்  இயற்கை நியதி அதற்கு அமைந்
திருக்கிறது. அதனால் மனிதனின் பரு உடலிலுள்ள சிற்றறைகள் [size=12]
(Cells) [/size]எல்லாம் பூமியின் மையம்  நோக்கி இழுக்கப்படவும், அதே உடலில்
உள்ள உயிர் அணுக்கள் உடலைவிட்டு மேலே தள்ளப்பட்டுக்  கொண்டே இருக்கவும், பூமியின் தற்சுழற்சி காரணமாக இருக்கிறது.

★பூமியின் கவர்ச்சிச் சக்தியால் உடலை விட்டு உயிர் பிரியாதிருக்க,
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு காலம் அமைந்து உள்ளது. அந்தக் காலம்
வரையில், ஒவ்வொரு நாளும் உயிர்ச் சக்தியின் விலகல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கடைசியில்  பிரிந்துவிடும்.

★இந்த நியதியின் விளை வாகவே, மனிதனுக்கு 40 வயது வரையிலே வளர்ச்சியும், 80வயதிற்கு மேலாகத் தளர்ச்சியும் உடலில் ஏற்படுகின்றன.
ஆறாவது அறிவிற்கு இயற்கையின் நியதிகளை உணர்ந்து, அதை ஓரளவு வெல்லும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலைப் பயன்படுத்தி உயிர்
உடலில் இருந்து பிரியும் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால்
மரணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப்  போடலாம்.

★உயிர் தாங்கியான வித்தைப் போதிய அளவு கெட்டிப் படச் செய்துவிட்டால்,
உயிர் பிரியாமலே அதனை உடலிலேயே நிலைக்க வைத்து விடவும்
செய்யலாம். வாழ்ந்தது போதுமென்ற நிறைவு ஏற்படும் போது மன
இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம்.

★மன இயக்கம், உடல் இயக்கம் இரண்டும் நின்று விட்ட பின், உடலிலேயே உயிர் அடக்கம் பெற்று இருக்குமானால், அதனை ஜீவசமாதி என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையை அடைய வேண்டுமானால் வித்தின் நீர்ப்புத்
தன்மையைக் குறைத்து, உடலை விட்டு பல வகையிலே வெளியேறும்
தன்மையையும் குறைத்து விட்டால், மூலாதாரத்திலேயே தேக்கமுறும்.
வித்திலிருந்து சுத்த சக்தியான,ஓஜஸை பதங்கமாகப் பிரித்து முதுகுத்
தண்டு வழியாக மேலேற்றி, மூளையில் உற்பத்தியாகும் வித்துச்
சக்தியோடு இணையச் செய்ய முடியும். இதனை ஆங்கிலத்தில்
[size=12]Recycling of Sexual Vital Fluid [/size] என்று கூறலாம்.

★இதற்கு முறையான பயிற்சியினைப்  பின்பற்ற வேண்டும். முதுமையைத்
தடுக்க, ஒவ்வொரு நாளும், தளர்ச்சியுறும் நரம்புகளைப்  பயிற்சியினால் முறுக்கேற்றிக் கொண்டிருக்க வேண்டும். மரணத்தைத் தடுக்க, வித்துச் சக்தியைப் பதங்கமாக்கி, அதன் உற்பத்தி நிலையத்தோடு இணைக்க
வேண்டும். இந்த இரண்டு பயிற்சிகளும் ஒன்றிணைந்ததே காயகல்பப்
பயிற்சியாகும்.

★அரியதோர் சித்தர் கலையாகிய இந்தக் காயகல்பப் பயிற்சி காலை,
மாலை மற்றும் உணவுக்கு பிறகும், இரவு படுக்கும் முன்பும் அததற்கேற்ற
இருப்பு நிலையில் செய்து வாருங்கள்.முதல் வாரம், நரம்பூக்கம் என்ற  பயிற்சியினை ஒவ்வொரு நிலையிலும் பத்துத் தடவைகள் செய்து,
ஓஜஸ்மூச்சு ஒன்று வீதம்  போட்டு வாருங்கள்.

★உங்கள் உடலுக்கு பொருந்திவிட்ட பிறகு, நரம்பூக்கப் பயிற்சி இருபதும், ஓஜஸ் மூச்சுப் பயிற்சி இரண்டும் ஒவ்வொரு நிலையிலும் போடலாம்.
முதலிலேயே அதிகமாக ஓஜஸ் மூச்சுப் போட்டால் உடலில்
சூடு அதிகமா கலாம். உள் சதைகளில் சிறிது பொருந்தா உணர்வு ஏற்படலாம்.
★உடல் சூடானாலும், உள்சதைகளில் சிறிது வலி தெரிந்தாலும்
ஓரிரு நாளைக்கு அல்லது சில வேளைகளுக்கு ஓஜஸ் மூச்சுப்
பயிற்சியை நிறுத்தி வைக்கவும்.

▶வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக