Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

புரட்சியும், திரட்சியும்

"மனித வாழ்வு நலம் பெற இந்நாள் வரையில் உருவான சிறந்த திட்டங்கள் மக்களிடையே குழு உணர்ச்சியை ஏற்படுத்தி, உரிமை கோருகின்ற புரட்சியாக வெடித்தன. புரட்சியில் மக்களைப் பிரித்து வைத்தல், பிணக்கு ஏற்படுத்துதல், பகை, போர் இவற்றை மூட்டுதல் எல்லாம் உருவாயின. வாழ்வில் முன்னேற்றத்தை விடச் சிக்கல்களும், துன்பமும் பெருகின.
....

"மனவளக்கலை" மூலம் நாம் உலகுக்குக் காட்டுவது "கர்மயோகம்" என்கிற உலகப் பொது சமயம் ஆகும். இது புரட்சிக்கு பதிலாகத் திரட்சி முறையாகும். அதற்கு மக்களனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு வருவோம். நலம் பெறுவோம். ஒருவருக்கொருவர் துன்பம் தவிர்க்கின்ற ஈகையை ஆற்றி, துன்பமே எழாத வகையில் எண்ணம், சொல், செயல் இவற்றைக் காக்கின்ற ஒழுக்க நெறியில் வாழ்வோம்.
.

இது உள்ளத்தை உயர்த்துகின்ற வாழ்க்கை நெறியாகும். எளிய முயை உடற்பயிற்சி, உடலுக்கும், உயிருக்கும் இடையே நட்பினைக் காத்து நலமளிக்கின்றது. அகத்தவம் (Simplified Kundalini Yoga) எனும் உயிர்மேல் மனம் வைத்துச் செய்கின்ற ஓர்மைப் பயிற்சியாகிய உளப் பயிற்சி (Systematic Psychic Practice) - மனத் தூய்மையை, வலுவை, தெளிவை அளிக்கவல்லது."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக