Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 26 பிப்ரவரி, 2015

நன்மக்கட்பேறு

பால் உறவு, அதை ஒட்டிய அறிவு எவ்வளவுக்கெவ்வளவு ஒரு சமுதாயத்தில் தெளிவாக இருக்கிறதோ அந்த அளவுக்குதான் சமுதாயம் நல்லமுறையிலே மகிழ்ச்சியாக உடல் நலத்தோடும், மனவளத்தோடும் இருக்கமுடியும்....
.
.
பால் உறவு பற்றி ஒவ்வொருவரும் எவ்வளவு தெரிந்துகொள்ளவேண்டுமோ அவ்வளவையும் தெளிவாக தெரிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கையில் ஒரு பெரும் பொறுப்புணர்ச்சி ஏற்படும்
.
.
செயலுக்கு விளைவு நிச்சயம்(Cause and effect) செயலிலே விளைவு இருக்கின்றது என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்துகொள்ளப்பெற்றால்,
.
.
ஓர் ஆசை எழும்போது அதை நிறைவேற்றிக்கொள்ள செயலில் இறங்கும் போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்யவும், தீமை வரும் என்று நினைத்தால் அஞ்சித்தடுத்துக் கொள்ளவும் முடியும்.
.
.
உள்ளமும் உடலும் சரியாக செயல்பட வேண்டுமென்றால் போதிய அளவும் உயிர்ச்சக்தி வேண்டும். உயிர்ச்சக்தியை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். உயிர்ச்சகிதி உடலிலே சரியாக இருக்கவேண்டுமானால், அதை தாங்கக்கூடிய சக்தி, அதாவது விந்து சக்தியானது போதிய அளவிலேயும், போதிய அழுத்தத்துடனும் இருக்கவேண்டும். மின்சாரத்திற்கு மின்கலம் (Battery) மாதிரி இருக்கக்கூடியது இந்த விந்துசக்தி
.
.
நாம் உண்ணும் உணவினை ரசமாக்கி, ரசத்திலிருந்து ஒரு பகுதியினைக் கொழுப்பாக்கி, அந்த ஒரு பகுதி கொழுப்பிலிருந்து கால்சியம் எடுத்து எலும்பாக்கி, எலும்பிற்கு ஊடே மஜ்ஜையாக்கி, அந்த மஜ்ஜையிலிருந்து ஒரு பகுதியை சுக்கிலமாக்குகிறது. அந்த சுக்கிலத்திற்கு பெயர்தான் விந்து.
.
.
இந்த ஏழாவதாக வந்திருக்கக்கூடிய விந்து நாதத்திலிருந்து உருவாகக்கூடிய ஒரு சுத்த சக்தியைத்தான் Zetoplasm என்று சொல்லுகிறார்கள். அதுதான் ஒவ்வொரு சிற்றறைக்கும் காந்தச் சக்தி மின்சார சக்தியாக மாறுகின்றபோது அது தாக்காத அளவிற்கு தன்னைக் காத்துக்கொள்வதற்கும்(Providing Insulation).
.
.
அதே நேரத்தில் உயிர்ச்சக்திக்கு பூச்சு வேறு கொடுத்து பதிவுகள் Imprints (நம் செயல்கள்) எல்லாம் உடலின் சிற்றறைகளிலே விரிவு சுருக்கப்பதிவுகளாகவும் மூளையின் சிற்றறைகளிலே நினைவுப்பதிவுகளாகவும் ஏற்பட வகை செய்கின்றது.
.
.
இந்த Sexual Vital Fluid -ஐ இருபாலரும் எந்த அளவு பாதுகாத்து எந்த அளவு சரியானமுறையிலே வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவு உயிர்ச்சக்த்தியும் இருக்கும்.
.
.
உயிர்ச்சக்தியும், விந்துச்சக்தியும் எவ்வளவில் இருக்கின்றதோ அவ்வளவில்தான் வாழ்க்கையிலே உடல்நலம், மனநலம் எல்லாம் இருக்கும்
.
.
இந்த நிலையைத்தான் பழைய பாடல் ஒன்றிலே தெளிவாக சொல்லியுள்ளார்;
.
.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மான மிழந்து மதிகெட்டு - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”
.
.
.
கருவமையும் காலத்திலே விந்து நாதத்தின் பெருமை, மதிப்பு இவற்றை பொறுத்தே குழந்தை உண்டாகின்றது. விந்து நாதமோ உடல்நலம், மனநலம் மற்றும் அவரவர் வினைப்பதிவு (Imprints) முதலியவைகளைப் பொறுத்தே அமைகின்றது.
.
.
விந்து நாத வளர்ச்சி, கரு அமையும் காலம், இடம், கரு அமையும் காலம் முதல் கரு கழியும் காலம் வரையில் பெற்றோரின் நடவடிக்கைகள் யாவும் ஆராய்ந்து செயல்-விளைவுத் தத்துவத்தினை உணர்ந்து உடல், மனம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, முறையாக நெறியோடு வாழக்கூடிய ஓர் அற உணர்வினை வளர்த்துக்கொண்டால் மக்கட்பேற்றை- உயர் நன்மக்கட்பேறாக அடையமுடியும்
.
.
நன்மக்கட்செல்வம் வையகத்தை வாழ்விக்கும் வளமுடனே
.
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக