Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சமுதாயத்தினிடையே நட்பு கெடக் காரணம்?

மக்களிடம் சிந்தனையாற்றல் வளர்ந்துள்ள இக்காலத்தில் போர் தேவையே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவினிடம் உலக நாடுகளின் எல்லைக்கோடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்புவித்துவிட்டு, எந்த நாடும் பிற நாட்டுக்கு அஞ்சாமலும், பிற நாட்டைப் பகைக்காமலும் வாழலாம்.
.
மனித சமுதாயத்தில் வாழ்வின் வளங்கள் அனைத்தையும் போர் அழிக்கவல்லது. ஆதிகால மக்களிடம் சிந்தனை வளராத காலத்தில், அவர்கள் விலங்கினத்தைப் போன்று பிற உயிரைத் துன்புறுத்தியே வாழ்ந்த காலத்தில், தோன்றிய முரட்டுச் செயல் தான் போர். அக்காலத்தோடு இக்காலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதனின் சிந்தனை எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது. நிலவுக்குப் பயணம் செய்யவும், கம்ப்யூட்டர் சாதனங்களைத் தினசரி வாழ்வில் பயன்படுத்தவும் மனிதனின் அறிவு உயர்ந்து உள்ளது. இந்தக் காலத்திலும் போர் மனித சமுதாயத்தில் உருவாகின்றது, மக்களைச் சீர் குலையச் செய்கிறது என்றால், இது பெரும் தவறு ஆகும். 'போரினால் எத்தனை மனித உயிர்கள் துன்பமடைகின்றன! நாசமடைகின்றன!' என்று எளிதாக அனைவரும் உணரலாம். மனிதகுல வாழ்வைச் சீரமைத்துக் கொள்ளப் பொருள் உரிமைச் சட்டங்கள், எளியவரை வலியவர்கள் தாக்கித் துன்புறுத்தாமல் காக்கும் சமுதாய நலச் சட்டங்கள் இவற்றை இயற்றவும், நிர்வாகம் செய்யவும் அரசியல் முறையில் சிறந்து உயர்ந்துள்ள காலம் இது.
.
இறைநிலையை உணர்த்தி, அறநெறியைப் போதித்து, வாழ்க்கை ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக இக்காலத்தில் எத்தனை மதங்கள் தோன்றிச் செயலாற்றி வருகின்றன! இன்னமும் பல உயிர்களை வருத்தியும், கொன்றும், அவர்கள் உடமைகளை அழித்தும் நீடித்து வரும் போர் உலகில் இருக்கின்றதென்றால், தவறு எங்கே இருக்கின்றது? ஆட்சி முறையில் பொறுப்பின்மையும் மதத் தலைவர்களிடையே உண்மையான கடவுள் உணர்வின்மையும் அன்றோ காரணம்?.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 .
"சமுதாயமே மனிதனுக்கு நீதி
வழங்கும் ஆட்சி மன்றம்".
.
"உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்திய கடன்".
.
உயர் வாழ்க்கைக்கு வழி:

"எண்ணிறந்த மதங்கள் உண்டு மனிதருக்கு
எனினும் தெய்வம் என்ப தொன்றேயாகும்
நுண்ணி ஆராய்ந்தறிந்த அறிஞர் செய்த
நூல்களெல்லாம் மனிதர் தங்கள் முயற்சியாலே
எண்ணத்தை அகத்தவத்தால் பண்படுத்தி
எங்கும் நிறை பூரணத்தின் தன்மை கண்டு
மண்ணுலகில் ஏழ்மை, பழிச்செயல்கள் ஐந்தை
மாற்றி உயர்வாய் வாழும் வழியைக் காட்டும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக