Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும்

ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராய்ந்தால் - இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் (பாவப்பதிவுகள்) நீங்கினால்தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும்?
ஓர் உடலை எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பாவப்பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும். அல்லது யோக சாதனைகள் மூலம் களங்கங்களை நீக்கிக் கொள்ளலாம். அதற்குத்தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது.
...
உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்ச்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. அகவே உடலை உயர்வாகக் கருதி , சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.
.
உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல்தானே வாகனம்.
இந்த வாகனத்தை பேணிப் பாதுகாத்தால் தான் இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக