Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

"இறையுணர்வில் ஒளியுண்டாக்கி அறிவில் முழுமை எய்த, வாழ்வில் வெற்றி பெற - நாம் பின்பற்ற வேண்டிய சுலபமான சாம்யம்" (Formula) :-

"மனிதன் சமுதாயமாகச் சேர்ந்து வாழப் பழகி விட்டான். இனி இந்த நிலையை மாற்றிக் கொண்டு மிருகங்களைப் போன்று தனித்தனியாக வாழ முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் பலபேருடைய உழைப்புத் தேவைப்படுகிறது. அதேபோல் ஒரு தனிமனிதனுடைய உழைப்பின் பயனும் சேர்ந்து சமுதாயம் வளம்பெறுகிறது. எல்லோரும் கூடிச் சமுதாய வளத்தைத் துய்க்கிறோம். குழப்பம் விளையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கவும், மிருகங்களுக்குத் தேவைப்படாத ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அதுதான் "அறநெறி" (ஒழுக்கம், கடமை, ஈகை). அந்த அறநெறிதான் மனிதகுலத்தையே காத்து வருகின்றது. 'அறநெறி வாழ்வு' (ஒழுக்கம், கடமை, ஈகை) ஓரளவிற்காவது இன்று நிலவி வருவதால்தான் மனிதகுலம் இந்த அளவிலாவது இருக்கிறது. அறநெறிகள் அறவே ஒழிந்தால் மனிதகுலம் பூண்டற்று போய்விடும். அறநெறிகள் அழியாமல் பாதுகாக்க எழுந்தவையே இன்று உலகிலுள்ள மதங்கள் எல்லாம்.
.
ஒரு மனிதனின் செயல் அவனையும் பாதிக்கலாம். பிறரையும் பாதிக்கலாம். எனவே துன்பம் தனக்கோ, பிறர்க்கோ தோன்றாமல் ஒவ்வொருவரும் தத்தம் செயலை வகுத்துக் கொள்ள வேண்டும். அத்துன்பம் உடலுக்கும் கூடாது. அறிவிற்கும் கூடாது. அது உடனேயும் தோன்றக் கூடாது. எதிர்காலத்திலும் தோன்றக்கூடாது. அளவாலும் கூடாது, முறையாலும் கூடாது எண்ணத்தாலோ, சொல்லாலோ செயலாலோவும் கூடாது. அத்தகு செயல்களை மட்டும் புரிதலையே 'ஒழுக்கம்' என்கிறோம்.
.
இதற்கு ஒரு சாம்யம் (Formula) என்னவெனில், "தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுணர்ச்சிக்கோ துன்பம் தராத செயல்கள் எல்லாம் புண்ணியம். துன்பம் தந்தால் அவை பாவம். இந்தச் சட்டத்தை உணர்ந்து, மதித்து ஏற்றவாறு செயலாற்றி வாழ்தலே ஒழுக்கம். ஒழுக்கத்தை ஒருவர் உயிரைப் போல் ஓம்பி வாழ்ந்தால் பிறர் கருத்துக்கும் தேவைக்கும் மதிப்புக் கொடுத்துத் தன்தேவையையும் கருத்தையும் நிறைவு செய்து கொள்ளுகின்ற பெருந்தகைமை இயல்பாகிவிடும்."
.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்." - திருக்குறள்.
.
******************************************************************
.
ஒழுக்கத்தில் உயர்ந்தார் :-
"ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் உள்ளுணர்வு பெற்றோர்கள்
உடல்நலமும் மனவளமும் உயர்அறிவும் பெறுவார்கள்
அழுக்காறு அவா வெகுளி அனைத்துக் களங்கம் மறையும்.
ஆன்மிக உணர்வு மிகும் அறிவறியும் பேறுகிட்டும்;
வழுக்காமல் நன்நெறியில் வாழ்வார்கள் அவர் தொண்டு
வாழ்மக்கள் அனைவர்க்கும் வழி காட்டியாய் அமையும்
பழக்கத்தால் நல்வினையே ஆற்றுவதால் உலகுக்கு
பயனுடைய செயல் பலவும் எளிதாகும் அவர் வாழ்வில்."
.
அறிவில் முழுமை எய்த:-
"ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும்
ஒன்றிணைந்த உயர்நெறியே அறம் என்றாகும்;
ஒழுக்கத்தில் கடமை, ஈகை இரண்டும்
உள்ளடங்கி இருப்பதனை உற்றுப் பாரீர்;
ஒழுக்கமே வாழ்வில் என்றும் வெற்றி நல்கும்,
உயர் மக்கள் செல்வமும் அளிக்கும் மேலும்
ஒழுக்கமே இறையுணர்வில் ஒளியுண்டாக்கி
உயர்த்தி அறிவில் முழுமை எய்த வைக்கும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக