Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 9 பிப்ரவரி, 2015

இறைவழிபாடு

இயற்கையின் இருப்பை உணர்தல், முயற்சியை நல்ல முறையிலே, வெற்றியான வழியிலே செலுத்துதல், உயிர்களுக்குத் தீமை இல்லாத முறையில் ஆக்கத் துறையில் வாழ்வை செலுத்திக் கொள்வது என்பது 'அறம்'. மற்றொன்றான அகம் நோக்கிச் செய்யும் இறை வழிபாட்டைத்தான் 'தவம்' (Simplified Kundalini Yoga) என்று சொல்கின்...றோம். எந்த மெய்ப்பொருளை, எந்த உண்மையை உணர்ந்து எந்த இயற்கை வழிபாட்டை உணர்ந்து அதை மதித்து நடக்கின்றோமோ, அதை நினைவில் வைத்துக் கொள்கின்றோமோ, அதை எப்பொழுதும் விழிப்போடு பார்த்துக் கொள்கின்றோமோ, அது தான் 'இறைவழிபாடு'.

இயற்கை என்பது மனிதன் அறிவுக்கும் வாழ்வுக்கும் ஏற்றமளிக்கும் ஒரு மாபெரும் ஆற்றலுடைய தத்துவம் இது:
.

1) இருப்பு நிலையான ஆதியில் இறைவெளியாக,

2) இயக்க மூலமான ஆற்றலில் விண்துகளாக,

3) விண்துகள்கள் கூடிய கூட்டு இயக்கத்தில் பஞ்சபூதங்களும் அவை கூடிய அண்டங்கள் பலவாக,

4) இயற்கையின் விளைவுகளை உணரும் ரசிக்கும் நிலையில் ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையிலும் நான்கு நிலைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
.

இயற்கையின் பெருமையை, சிறப்புகளை, விளைவுகளை உணர்ந்து கொள்ள மனிதன் எடுக்கும் முயற்சியில் மன அலைச்சுழல் (Mental Frequency) விரைவைக் குறைத்து, அலைகள் - நிலையாக, அதுவே - அறிவாக, அதையே - தானாக, அவ்வறிவாக இருக்கும் பேராற்றலே எல்லாம்வல்ல இறைவெளியாக, உணர்ந்து முழுமை பெறும் முயற்சிதான் 'தவம்' (குண்டலினி யோகம் - Simplified Kundalini Yoga) ஆகும்.
.

தவத்தால் கண்ட உண்மைகளை மறவாமல் வாழ்வில் ஒழுகி தனக்கும் பிறர்க்கும் ஆக்கமே தரும் வழியில் ஒத்தும் உதவியும் வாழும் நெறியே 'அறம்' ஆகும். 'தவமும் அறமும்' இறைநிலையுணர்ந்து அவ்வழியே வாழத் திறமையளிப்பதால் இவையே "இறைவழிபாடு" எனப்படுகின்றது.
.

மனிதனை இன்ப துன்பச் சுழலால் பாதிக்கப்படாத அமைதி நிலைக்குக் "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) உயர்த்துகிறது.
.
உணர்வோம் வளமோடு வாழ்வோம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

********************************************************************
.

முழுமையும் அமைதியும்:-

"அறிவுஆறாம் நிலையை எய்த பின்னர்
அதுமுழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவுக்கு அமைதிகிட்டா; அவ்வப்போது
அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் ஆறுகுணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதன் மூலநிலை நோக்கி நிற்கும்
அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக