Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 11 பிப்ரவரி, 2015

எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினியோகம் - Simplified Kundalini Yoga

"தவறிழைப்பது மனம். இனித்தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே. மனம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு; அதுதான் அதன் தன்மை; மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய நல்ல வழியில் எப்படிச் செல்ல முடியும்? மனதின் குறைகளைப் போக்கியாக வேண்டும். நல்வழியில் தீர்மானமாக நிற்கும் சுய பலத்தை மனதிற்கு ஊட்டியாக வேண்டும். அதை யார் செய்வது? மனம் தான் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
.
இன்பமும் அமைதியும் மனத்திற்குள்ளிருந்து தான் வர வேண்டும். மனதைத் தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனதினிடம் தான் இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொண்டால் இடையறா இன்ப நிலையை அடையலாம். மனம் தன்னையே நன்கு பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும். அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால் அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும் தரத்தில் ஒன்றே.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
***********************************************************************
.
உயிர் அறி கல்வி:-
"கற்ற கல்வியால் மனிதன் முழு அளவில் பயனைக்
காணவெனில் தன்உயிரை உணரத்தக்க
நெற்றிக்கண்-ஆசானால் திறக்கப் பெற்று
நிலையாது சுழலுமனம் உள்ளொடுங்கி;
பற்றற்ற நிலைவரையில் பழகவேண்டும்.
பதிபசு பாசம் நிலைகள் விளக்கமாகும்,
நற்றவத்தால் வாழ்வு வளம் பெருகத் துய்த்து
நாட்டுக்கும் தொண்டாற்றி நலம் விளைவிப்போம்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக