Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 9 மே, 2013

ஆளுமைத்திறன்


இயற்கை வளங்களை வாழ்வின் வளமாக உருமாற்றியும் அழகுபடுத்தியும் வாழ்ந்து வரும் மனித இனம் மற்றவர்களோடு பிணக்கின்றி வாழ வேண்டியது மிக அவசியமாகின்றது. இந்த நெறியே அறம் எனப்படுகிறது. இந்தப் பெருநோக்கத்தில் வாழ மனதையும் செயல்களையும் சிந்தனையின் உயர்வுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். பல ஆயிரம் தலைமுறைகளாக ஆற்றிய எண்ணம், செயல்பதிவுகளால் வடிவம், தரம், திறம் அமையப் பெற்ற மனிதன் தனது ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ள வேண்டுமெனில் அதற்கு ஏற்ற உளப் பயிர்சியும் செயல்பயிர்சியும் வேண்டும். புலன்கள் மூலம் உணர்ச்சி நிலையில் வாழும் மனிதனுடைய மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் (Beta Wave) இயங்கிக் கொண்டிருக்கிறது. சிந்தனையாற்றல் பெருக வேண்டுமெனில் மனம் வினாடிக்கு 14 சுழலுக்குக் குறைவான அலை இயக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

மனித அமைப்பில் பரு உடல் (Physical Body), நுண்ணுடல் (Astral Body), பிரணவ உடல் அல்லது சீவகாந்த உடல் (Causal Body) ஆகிய மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்புரிகின்றன. சூக்கும உடலாகிய உயிர்த்துகள் மீது (Life Force) மனம் வைத்து அக நோக்குப் பயிற்சியினைப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியில் அனுபவம் பெற்றவர் மூலமே இதை உணர்ந்து பழகும் பயிர்சியே அகநோக்குப் பயிற்சி எனப்படுகிறது. இப்பயிற்சியால் மன அலைச் சுழல் படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 1 லிருந்து 3 வரையில் வருமேயானால் மனம் அமைதி நிலைக்கு வரும். இந்த மனநிலையில் மனம், உயிர், இறைநிலை என்ற மூன்று மறை பொருட்களையும் உணரும் திறமை மனித மனதுக்கு கிடைக்கும். தேவையில்லாத, துன்பமே தரும் பதிவுகளை மாற்றி ஆளுமை வளத்தை சிறப்பித்துக் கொள்ளவும், இந்தப் பயிற்சியோடு அகத்தாய்வுப் பயிற்சிகளையும் பயின்று செய்தால் மனிதனுள் அடங்கி இருக்கும் ஆற்றல்கள் முழுவதையும் வெளிப்படுத்திப் பயன் கண்டு தானும் சிறப்பாக வாழ்வதோடு, குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் தன கடமைகளைச் செய்து நிறைவு பெறலாம். அமைதியும் இன்பமும் பெறலாம்.


 - * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"மனித மனதை விட இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பெரிய நிதியும்,
பேராற்றல் பெற்ற எந்தப் பொருளும் இல்லை".

.
"ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால், பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம், அங்கங்கே என்னென்ன நடந்ததோ, அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்".

.
"அகத் தவத்தால் ஐம்புலனை அடக்கி
அறிவறிந் திடலாம் !
அகத் தவத்தால் ஆறுகுண
ஆளுமைப் பேறடைந்திடலாம் !
அகத் தவத்தால் இல்லறத்தை
அன்பகமாய் ஆற்றிடலாம் !
அகத் தவத்தால் அனைத்துயிர்கள்
அருநட்பைப் பெற்றிடலாம்" !

.
"அகத் தவம் தீவினை யகற்றும்
அருள் நெறியை இயல்பாக்கும் !
அகத் தவமே இறைவழிப்பாடனைத்திலும்
ஓர் சிறந்த முறை !
அகத் தவமே உயிர் வழிபாடதனை
விளக்கும் ஒளியாம் !
அகத் தவமே மதங்களெல்லாம்
அடைய விரும்பும் முடிவு ! "
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக