Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 4 டிசம்பர், 2014

இறைநிலையின் ஆற்றல்

நாம் உணவு உட்கொள்கிறோம். இது வாழ்விற்கு அவசிய தேவையாகிறது. எவ்வாறெனில், நாம் உலகம் என்ற கோளின் மீது வாழ்கிறோம். உலகுக்கு இது புறப்பகுதி.
உலகம் விரைவாகத் தன்னைத்தானே ஒரு நாளைக்கு ஒரு சுற்று என்று சுற்றிக்கொண்டே இருக்கிறது.,
உலக சுழற்சி விரைவால் கனத்த பொருட்கள் மையம் நோக்கி நகர்வது(centripetal force) , இலேசான பொருட்கள் புறப்பகுதி நோக்கி நகர்வதும்(centrifugal force) இயல்பான நிகழ்ச்சிகள்.
...
இதனால் உடலிலுள்ள கனத்த அணுத்திரல்கள் புவி ஈர்ப்பு ஆற்றலால் நாள்தோறும் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
அவ்வாறு உதிர்ந்துபோகும் இடங்களில் புதிய அணுத்திரல்கள் தேவைப்படுகிறன. உணவு, நீர், காற்று இவை மூன்றும் இணைந்துதான் அணுத்திரல்களின் தேவை நிறைவுசெய்யப்படவேண்டியுள்ளது.
எனவே உணவு வாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
நாம் உண்ணும் உணவானது இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என ஏழு தாதுக்களாக ஒன்றிலிருந்து மற்றதாக தரம் மாறி உடலில் அந்தந்த தாதுக்களோடு இணைந்து உடல் இயக்கம் நீடிக்கின்றது.
உண்ட உணவை ஏழு தாதுக்களாக தரம் மாற்றுவது யார்..?
உண்டவனுக்கோ, அவனுடைய நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, உணவை தாதுக்களாக மாறும் கலைகளில் ஒன்றுகூடத்தெரியாது.
பின்னர் யார் அந்த செயலை செய்து கொண்டிருப்பது??
புலன்களுக்கெட்டாத- பூரணம், பேராற்றல், பேரறிவு இம்மூன்றையும் உடைய- ஓர் எல்லாம் வல்ல பேராற்றல் தான் தன்னிறுக்கச்சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் எல்லா உயிர் உடல்களிலும் ஊடுருவி இத்தகைய அறிய செயல்களை செய்துகொண்டிருக்கிறது
இதனை இயற்கை நியதியென்றும், இறைநிலையின் ஆற்றல் என்றும் வழங்கி வருகிறோம்
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக