Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 16 ஜூலை, 2013

பாவபதிவு

ஆசிரியர் பணியில் இருக்கும் நான் சில சமயங்களில் மாணவர்களைக் கண்டிக்கவும்,தண்டிக்கவும் வேண்டிருக்கிறது.இதுபோல் நீதிபதியும் தவறு செய்பவர்களைத் தண்டிக்கிறார்.இது பாவபதிவில் சேருமா ?

சுவாமிஜி அவர்களின் பதில்--
...
மாணவனின் நன்மைக்காகவே கண்டிப்பதால் இச்செயல் புண்ணியத்தையே சேரும்.கடமை உணர்வோடு விழிப்பு நிலையில்,சினப்படாது,துன்பம் வராத அளவிற்கு,கண்டிப்பு இருக்குமானால் அது பாவபதிவைத் தராது.
ஒரு குற்றவாளிக்கு நீதிபதி சிறைத் தண்டனை தருகிறாரென்றால் அது பாவமாகாது.ஏனெனில்,மனப்பிணக்கோ,பகையோ அங்கு இல்லை.குற்றவாளி ஒருவன்,தான் செய்த குற்றத்தை உணர்வதற்கு எவ்வளவு காலமாகும் என்று கணக்குப் போட்டு அவன் திருந்துவதற்குண்டான பயிற்சித் திட்டம் தான் தண்டனை என்பது.
தண்டனை என்பது குற்றவாளி திருந்துவதற்குண்டனா ஒரு வாய்ப்பாக,திருந்தும் வரை சமுதாயத்தில் மீண்டும் தவறு செய்யாதிருப்பதற்கு ஒரு தடையாக இருக்கச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு விதிமுறையாகும்.
ஒருவன் குற்றம் புரிவதற்கு அவனைச் சரியாக வளர்க்காத சமுதாயம் தான் காரணம்.
எனவே,அவன் திருந்தும் வரை அவனுடைய தேவைகளுக்காகும் செலவைச் சமுதாயம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.சிறைக்கைதி என்றால்அரசாங்க விருந்தினன்.
குற்றம் செய்பவர்களைத் திருத்துவதற்காகத் தான் தண்டிக்கிறோம்.அது பாவபதிவைத் தராது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக