Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 12 ஜூலை, 2013

மனிதன் கடமை

ஈட்டும் பொருள்களில் அதிகமாக மிகுதியிருந்தால் அதை முறைப்படி பிறர்க்கு உதவுவது மனிதன் கடமை. குறைந்த பட்சம் தனது வருமானத்தில் 100-ல் ஒரு பங்கு ஒதுக்கித் தன்னலமற்ற ஈகையாக்கிப் பிறர்க்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளர, அன்பு ஓங்க ஏற்ற நற்செயலாகும்.
பொருளாசை வேண்டாம் என்று ஞானிகள் பலர் கூறியுள்ளார்கள். "பிறர் நலம் கெடுக்கும் அளவிற்குப் பொருட்கள் மீது பேராசை வேண்டாம் என்ற குறிப்பே அது". கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பொருள் ஈட்டுவதை அந்தப் போதனை கட்டுப்படுத்தாது. பொருள் இன்றி வாழ முடியாது. ஒருவன் பொருளீட்டும் கடமையிலிருந்து விலகினால் அவன் கடமையைச் சேர்த்து மற்றவன் செய்துதான் ஆகவேண்டும். அது பிறர்க்கு பாரமே. ஆகவே ஞானியாக இருந்தாலும் முறையாக அறவழியில் பொருளீட்ட வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஒரு மனிதன் அறிவில் உயர்ந்திருந்தால், அதன் பயனைத் துய்க்க மக்கள் உணர்ந்து விரும்பினால், அவனுக்குப் பொருள் உதவிபுரிந்து அவன் ஆற்றலைச் சிறந்த முறையில் பயன் கொள்ளக் கூட்டு முறையில் வழி செய்து கொள்ளட்டும். அது வரையில் ஞானியானாலும் அவன் வாழ்க்கைத் தேவைக்கும் அவன் ஆற்றியுள்ள கடமைக்குப் பிறர் உழைப்பையோ தயவையோ எதிர் பார்க்கக்கூடாது. 


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக