Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 4 ஜூலை, 2013

உணர்வுக்குயிர் கொல்லா நோன்பு

நம்முடைய உணவிற்காகப் பிற உயிரைக் கொல்லும்மோது நாம் மூன்று பாவங்களைச் செய்கிறோம்.
1.உயிர்க் கொலை
2.அதன் மூலம் அவ்வுயிர்க்கு அளிக்கும் துன்பம்
3.ஓர் உயிரின் வாழும் சுதந்திர்த்தைப் பறித்தல்.
அதனால் தான் வள்ளுவர்
“கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
என்கிறார். இக்குறளுக்கு மகரிஷி வித்தியாசமான விளக்கம் தருகிறார்.
ஒருவர் தன் நண்பரின் இல்லத்திற்குச் செல்கிறார். புலால் உணவு விருந்தாகப் படைக்கப்படுகிறது. இவன் மறுத்தும் அவர்கள் வற்பறுத்துகின்றனர். இவன் தன்னுடைய உறுதிப்பாட்டை கைகூப்பித் தொழுது விளக்குகிறான். பிறகு அவர்கள் வற்புறுத்தவில்லை. இத்தகைய கருணை உள்ளவனிடம் எல்லா உயிர்களும் தஞ்சமடையும். குறளின் கருத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள,
“கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
என்பதற்குப் பதிலாக
“கொல்லான், புலால் கைகூப்பி மறுத்தானை
எல்லா உயிரும் தொழும்”
எனப் படித்தால் சரியான விளக்கம் கிடைக்கும்.
இறையருள் வேண்டும் எனில் தன் ஊண் பெருக்கற்குப் பிறிதூண் உண்ணும் பாதகச் செயலைக் கைவிட வேண்டும்.
--> -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக