Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 22 ஜூலை, 2013

ஏற்றத்தாழ்வினை நீக்கிக் கொள்ள வேண்டும்

ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டீர்களானால் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும். அந்தக் குடும்பத்தில் நல்ல குழந்தை பிறக்க வேண்டும். அந்தக் குழந்தை அறிவுடையவனாக சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக வாழ வேண்டும், குடும்பத்திற்கும் நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். அப்படியானால் அந்தக் குழந்தைப் பேறுக்கு உரிய ஆண், பெண் இருவருமே சம உரிமை, அறிவிலே திறமை, நுட்பம் இவை நி...றைந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மாத்திரம் கல்வி வசதி, செல்வ வசதி இன்னும் அதிகார வசதி எல்லாமே வைத்துக் கொண்டு பெண்களுக்கு அவை மறுக்கப்பட்டால் என்ன ஆகும்? ஒரு புறம் அறிவிலே, செல்வத்திலே, மற்றும் எல்லாவற்றிலுமே எழுச்சி, மற்றொரு புறத்திலே எல்லாவற்றிலும் தாழ்ச்சி. அங்கே பிறக்கக் கூடிய குழந்தை கூட அப்படித்தான் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வினை நீக்கிக் கொள்ள வேண்டும். இயற்கையமைப்பிலேயே ஆண் பெண்களுக்கு சில வேறுபாடுகள் உள்ளன. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்தான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக