Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 30 ஜூலை, 2013

பஞ்சகோசங்கள்

கோசம் என்றால் உறை என்பது பொருள். ஐந்து கோசங்களுக்கு மத்தியில் தான் மனம் மையம் கொண்டு செயல்படுகின்றது. கோசங்களை மனதின் எல்லைகள் என்றும் சொல்லலாம்.

உடல் தேவையான உணவைப் பற்றி எண்ணும்போது, மனம் அன்னமய கோசத்தில் இயங்குகிறது. ஒரு கருத்தைப் பற்றி எண்ணும்போது மனம் மனோமய கோசத்தில் இயங்குகிறது. தவத்தில் அமர்ந்து மனம் உள்நோக்கி உயிரின் மீது வைக்கும்போது பிராணமய கோசமாக இயங்குகிறது. மனம் விரிந...்து சூரியன், நட்சத்திரங்கள், பிரபஞ்சம் இவற்றை எண்ணும்போது விஞ்ஞானமய கோசமாக இயங்குகிறது. பிரபஞ்சத்தையும் தாண்டி, இறைநிலையான சுத்தவெளியில் மனம் ஒன்றி அதில் திளைக்கும்போது ஆனந்த மயகோசமாக இயங்குகிறது.

அன்னமய கோசத்திலிருந்து ஆனந்தமயப் பேறு பெறுவதே முழுமைப்பேறாகும். ஆனந்த மய கோசத்திற்கு இட்டுச் செல்லும் தவப் பயிற்சியே துரியாதீதமாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக