Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 29 ஜூலை, 2013

கருமையம்" ஓர் "தெய்வீகப் பெட்டகம்

உடலியக்கத்தாலும் மன இயக்கத்தாலும் ஏற்படும் சீவகாந்த ஆற்றலின் தாக்கங்கள் அனைத்தும் உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலில் கலந்து சுருங்கிக் கருமையத்தில் இருப்பாகி விடுகின்றன.உடலில் உள்ள சீவகாந்தம் தோல், நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், மூலமாக முறையே அழுத்தம், சுவை, மணம், ஒளி, ஒலி, இவையான மாற்றம் அடைந்து வெளியாகிப் பரவுவது போலவே கருமையத்தில் அமைந்திருக்கும் பதிவுகள் அவ்வப்போது மூளைச் செல்கள் மூலம் விரிந்து எண்ணங்கள் என்னும் அகக் காட்சிகளாக மலர்கின்றன. எனவே, 1) கருமையம், 2) மூளை, 3) புலன்கள், இம் மூவகையும் வான்காந்தக்களத்தின் சிறப்பு மிக்க உயிரினங்களின் செயல்பாடுகளாகும். கருமையத்தில் ஒரு பதிவு ஏற்பட்டால் அது எப்போதும் அழிந்து போவதில்லை. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு அது ஒரு பதிவேடுபோல உதவுவதோடு அவருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மரபு வழிப் பதிவுகளாகச் சிறிதுகூட மாறாமல் ஜெராக்ஸ் பிரிண்ட் போல பல தலைமுறைகளுக்கும் தொடருந்து வரும். மேலும் இறைநிலையானது தனது பரிணாம நியதியின் மூலம் விண்ணாகி, பஞ்சபூதங்களாகி, அண்டங்களாகி, உலகமாகி ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரையில் வந்த பரிணாம இயக்கங்களின் பதிவுகள் அனைத்தும் மனிதனுடைய கருமையத்தில் அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடத்தில் உள்ள கருமையம் இறைநிலையின் பிரபஞ்ச பரிணாமச் சரித்திரம் முழுமையாக அடக்கம் பெற்றுள்ள "தெய்வீகப் பெட்டகமாகும்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக