Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 27 ஜூலை, 2013

கணவன் மனைவி - பொருளீட்டல்

ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தைக் கணவன் மனைவி இருவருமே உயிர் போல் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவாகவே குடும்பத்தி...ல் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.
பொருள் ஈட்டுதலில் கணவன் மனைவி இருவரில் ஒருவரோ அல்லது ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வான திறமையும் பொறுப்பும் உடையவராகவோ இருக்கலாம். ஆயினும் காப்பது, நுகர்வது, பிறர்க்கிடுவது ஆகிய செயல்களில் இருவரும் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும்.
வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும் இக்காலத்தில் கணவனோடு மனைவியும் பொருளீட்டல் துறையில் முயல வேண்டும். வருவாய் குறைவாயுள்ள குடும்பத்தில் சிக்கனத்தின் மூலம் அதை ஈடு செய்வதில் கணவனை விட மனைவிக்கே அதிகப் பொறுப்பு உண்டு.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக