Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 24 ஜூலை, 2013

எண்ணத்திற்கு உயர்வளிப்போம் ஆராயிந்து

நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வைக்க வேண்டும். தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடமளிக்கவே கூடாது. மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் ஆராய வேண்டும். விழிப்புநிலை எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்.
எண்ணந்தான் அனைத்துமே ! எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை, நன்மையும் தீமையும் எண்ணத்தினுள்ளே ! சிறிதும் பெரிதும் எண்ணத்தினுள்ளே ! பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம் தான் உயர்வானது. எண்ணத்துக்கு அப்பால் எதுவுமே இல்லை.
எண்ணத்தின் உயர்வால் தனக்கும் உயர்வு, உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து தனக்கும், உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்ய இன்று முதல் சங்கற்பம் செய்துகொள்ள வேண்டும். எண்ணத்தை உயர்வாக்க வேண்டுமானால் முதலில் ஆசையை முறைப்படுத்திச் சீரமைத்து, சினம் தவிர்த்து, கவலையையும் ஒழித்து, நான் யார் என்ற உண்மையை உணர்ந்து, அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலே இருக்கப் பழக்க வேண்டும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக