Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 4 ஜூன், 2015

நோயற்று வாழலாம்

"இன்று உள்ள சமுதாய சூழ்நிலையில் பலருக்கும் உடல் உழைப்பிற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் உடல் நலமாக இருக்க உடலின் எல்லா அவயங்களுக்கும் இயக்கம் தேவை. இல்லாவிட்டால் அங்கு கழிவுப் பொருட்களின் தேக்கத்தினால் இரத்தம், காற்று, வெப்ப, ஓட்டங்களில் தடை முதலியன ஏற்பட்டு நோய் ஏற்படலாம். எனவே, ஒவ்வொருவரும் உடல் அவயங்கள் அனைத்துக்கும் இயக்கம் அளிக்கின்ற மாதிரி எளிமையான சில உடற்பயிர்ச்சிகளைத் தினமும் செய்து வர வேண்டும்....

.
'உலக சமுதாய சேவா சங்கத்தில்' - கற்றுத் தரப்படும் 'எளிய முறை உடற்பயிற்சி'களைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நோயற்று வாழலாம். இந்த உடற்பயிற்சியின் நோக்கமானது உடலினை உறுதி செய்து கொள்வது மட்டுமல்ல; உடலமைப்பின் இயக்கத்தைச் சீர்படுத்தி, உள்ளத்தையும் வலுவாக்குவதன் மூலம், நம்மை பலவீனப்படுத்தி வந்த 'பழைய வினைப் பதிவுகளிலிருந்து விடுதலை பெறும் வழியையும் உள்ளடக்கியது'.

.
ஆர்வமுள்ளவர்கள், உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ உள்ள 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' பயிற்சி மையம் உள்ள இடத்தை விசாரித்து நேரில் சென்று பயிற்சிகளை கற்று நல்ல பலனடையலாம்.

.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
,

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக