Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 17 ஜூன், 2015

விசித்திர லோகம்

நம்முடைய மனமே நாம் பெற்றுள்ள ஒரு அரும்பெரும் பொக்கிஷமாகும். அதை எப்படி நாம் பயிற்றுவிக்கிறோமோ அப்படியெல்லாம் அது விரிந்தும் சுருங்கியும் சிறப்போடும் செயல்படும். அணு அளவுக்கு சுருங்கவும் உலகளவுக்கு விரியவும் பேராற்றல் பெற்றது தான் நம் மனம். அதை நாம் எந்தெந்த நிலையில் வைத்து அனுபவிக்கிறோமோ அந்தந்த நிலைக்கேற்ப அமைதியும் மகிழ்வும் கிட்டும் அவ்வளவு தான். தவத்தால் இடம்தான் மாற்றம் அடைகிறதே ஒழிய செயல்படுவது ஒரே மனம் தான். நம் மனம் பேராற்றல் களத்தோடு ஒன்றுபடும்போது பேராற்றலோடு கூடி பேரின்பம் பெறுகிறது. விரிந்து புறமனமாக புலன்வழி செல்லும் போது அதற்குண்டான இன்ப துன்ப அனுபவங்களை பெறுகிறது. இதுதான் இந்த மனதின் விசித்திரமாகும். எனவே தான் இதை Wonderland - விசித்திர லோகம் என்கிறோம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக