Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 6 ஜூன், 2015

"ஐயா, சூழ்நிலை காரணமாக நமக்குச் சினம் வரும்படி நண்பர்கள் தூண்டும் பொழுது, நாம் மனதை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?"

மகரிஷியின் பதில் :
---------------------------
 "நம் மனதில் முன்னதாகவே ஒரு ஒத்திகை (Rehersal) செய்து கொள்ள வேண்டும். "அவர்களோ அறியாதவர்கள், பயிற்சி செய்யாதவர்கள், அவர்கள் என்ன கூறினாலும், எவ்வாறு சினமூட்டினாலும் நான் சினப்படாமல், எதிர்த்துக் கூறாமல்,
'என் வினைப் பதிவுதான் கழிகிறது'
என்று மனதால் ஏற்றுக்கொண்டு, அவர்களை வாழ்த்துவேன்." என்ற தீர்மானத்தை மனதில் ஆழமாக, உறுதியாக வைத்துக் கொண்டால், யார் என்ன கூறினாலும் அதைப்பற்றி மனம் வருந்த வேண்டிய அவசியமே வராது.
.
மனவளக்கலை மன்றங்களில் சினம் தவிர்ப்பதற்கென ஒரு தனிப்பயிற்சி முறை அளிக்கப்படுகிறது அப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்."

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஒரு எண்ணத்தை, ஒரு தடவை எண்ணிவிட்டோம் என்றால்,
நாம் நினைக்காமலே மீண்டும் மீண்டும் அதே எண்ணம்
எழுந்து, எழுந்து அடங்கும். இவ்வாறு பல தடவை எழும்போது,
அந்த எண்ணமானது ஒவ்வொரு தடவையும் வலுப்பட்டுச்
செயலைச் செய்வதற்கு உடல் செல்களையும் தூண்டிவிடும்.
ஆகவே எண்ணத்திற்கும் அளவு வேண்டும்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக