Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 11 ஜூன், 2015

அறிவை அறிய

நான்யார்?" என்ற கேள்வி எழுந்துவிட்ட பின்னர் அதற்குச்
---------------------------------------------------------------------------------------------
சரியான விடை காணும் வரை அறிவிற்கு அமைதி கிட்டாது.
---------------------------------------------------------------------------------------------
...
.
"நான்யார்?" என்பதற்கு விடை கிடைத்தால் தெய்வ நிலை அறியலாம், 'மெய்ப்பொருள்' என்பதை பற்றி உணரலாம். 'அறிவு' என்ன என்பது உணரப்படும்.

.
ஆக 'அறிவை' அறிதல், 'தெய்வநிலை' அறிதல் பிரபஞ்சத்திற்கு மூலகாரணமாக 'உள்ளதை அறிதல்' எல்லாமே ஒன்றுதான்.

.
அறிவை அறியவேண்டும் என்ற ஆர்வம் தான் "நான் யார்?" என்ற கேள்வியாகும். சிந்திக்கும் ஆற்றல் ஒங்கப் பெற்ற அறிவாளிக்கு "நான் யார்?" என்ற கேள்வி எழுவது இயல்பு. இக்கேள்வி எழுந்துவிட்ட பின்னர் அதற்குச் சரியான விடை காணும் வரை அறிவிற்கு அமைதி கிட்டாது. "நான் யார்?" என்ற கேள்வி இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு வாக்கியந்தான் என்றாலும் அதற்குள் இந்தப் பிரபஞ்ச இரகசியங்கள் அனைத்துமே அடங்கியுள்ளன.

.
அறிவை அறிய :

.
(1) மெய்ப்பொருள் உணர்ந்தோர் தரும் உரை மூலம் விளக்கம்,

(2) அனுபவம் மூலமாக தெரிந்து கொள்ள முறையான "அகநோக்குப் பயிற்சி" (Simplified Kundalini Yoga)

.
ஆக இந்த இரண்டு வழிகளைப் பின்பற்ற வேண்டும். உணர்ந்து கொள்வோர் ஆற்றலுக்கேற்ப பயன் விரைவும், முழுமையும் உண்டாகும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக