Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 22 ஜனவரி, 2015

மந்திரமும், அதை உச்சரிப்பதற்கான காரணமும்..


 .
.
பக்தியோகத்தில் கடவுளை வணங்கும்போது மனம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுக்க வேண்டும்.
...
மனித வாழ்வில் எந்த சம்பத்து குறைவாக உள்ளதோ அதை நிறைவு செய்ய அதற்கு தகுந்தாற்போல் கடவுளுக்கு உருவம், குணம் அமைத்துள்ளார்கள்.
.
.
மனம் அந்த வடிவத்தை எடுக்கும்பொழுது என்ன பலனை அடையவேண்டுமோ அந்த நுணுகிய நிலைக்குச்செல்ல வேண்டும்.
.
புறமனதிலிருந்து நடுமனதிற்கும், பிறகு அடிமனதிற்கும்(super conscious mind) செல்ல வேண்டும்.
.
மனம் அந்த நிலைக்குச்செல்ல அதற்கேற்றவாறு 51 அட்சரங்களிலிருந்து ஒலி வடிவத்தை சித்தர்கள் அமைத்துள்ளார்கள்.
.
அந்த ஒலி வடிவங்களை தொடர்ந்து ஒலிட்துக்கொண்டே இருந்தால் நாடி நரம்புகளிலெல்லாம் ஜீவகாந்த ஆற்றல், இயக்கத்தை ஏற்படுத்தி நுணுகிய நிலைக்கு மனதை கொண்டுவருகிறது என்பதை நீண்ட ஆராய்ச்சிக்குப்பிறகு கண்டுபிடித்துள்ளார்கள்
.
வாழ்வில் மனிதன் ஒரு பொருளையோ, நலத்தையோ, உயர்வையோ அடைவதற்கு ஏற்படுத்திய ஒலி அமைப்புகளுக்கு மந்திரம் என்று பெயர். அவ்வாறு அமைந்த சொல்லை உச்சரிக்கும்போது..முதலுக்கும், முடிவுக்கும் இடைப்பட்ட ஒலியே (cubic inches of air)மந்திரம் எனப்படும்.
.
.
மந்திரங்களை உச்சரிக்கும்பொழுது புறமனம் , அடிமனதிற்கு செல்கிறது. அடிமனம் இறைநிலையோடு தொடர்புடையது.
.
“முழுமையின் பின்னம் முறையிட்டுக்கேட்டால் முழுமை அதைக்கொடுக்கும்” (if fraction demands the totaly will supply) அதற்கு உடலும் மனமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
.
அதற்காகவே வழிபாட்டில் மந்திரங்களை இணைத்து வைத்துள்ளார்கள்
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக