Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 15 ஜனவரி, 2015

சூட்சுமப் பொங்கல்

வெட்ட வெளி என்ற பெரும் பானைக்குள்ளே
வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி,
அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்...
ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்,
கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்
கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்
தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது
சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சுமப் பொங்கல்."
.

"பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு;
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு,
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
.
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக