Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 1 ஜனவரி, 2015

சிறப்புணர்ந்த பெண் மதிப்பு

பெண்ணினத்தின் தெய்வீக மதிப்பை உணரலாம். பெண்களுக்கு, "தையலர்" என்ற ஒரு மதிப்புச் சொல்லும் இருக்கிறது. தையல் என்றால் இணைப்பு என்று பொருள். குடும்பங்கள் பலவற்றையும் ஒன்றோடு மற்றதை இணைத்து, உலகம் முழுவதையும் ஒரே கோர்வையாகச் செய்திருக்கும் அருளாற்றல் பெண்ணினத்திற்கே உரியதாகும். இத்தகைய தெய்வீக இணைப்பை வாழ்வில் இயல்பாகக் கொண்டுள்ள பெண்ணினத்தைத் தையலர் என்று கூறுவது எவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுடைமையாகும் என்று கவ...னியுங்கள்.
மேலும் திருப்பாவை என்று ஒரு நூலில் பெண்களைப் பற்றி ஓர் உவமைக் கூறப்பட்டுள்ளது. அது "நேரிழையாள்" என்பதாகும். ஒரு துணியை நேய்ய வேண்டுமானால் நேரிழைகள் என்னும் பாவு முதலாவதாக வேண்டும். அந்த நேரிழைகளின் குறுக்கே செலுத்தப்படும் நூலிழைக்கு,'ஊடு இழை' என்று பெயர். நேரிழை இல்லாமல் ஊடு இழைக்கு என்ன பெருமையுண்டு? நேரிழையை வைத்துத்தான் ஊடு இழையைச் செலுத்தி, எந்த ஆடையையும் உற்பத்தி செய்கிறார்கள். ஆகவே ஆடையில் முதற் பொருளாக இருப்பது நேரிழை.
அதேபோன்று உலகம் முழுவதும் மக்கள் குலத்தில் நேரிழைகளாக இருப்பவர்கள் பெண்மணிகள். அவர்களை முன்வைத்து ஊடு இழைகளாக விளங்குபவர்கள் தான் ஆண் மக்கள். எவ்வளவு ஆராய்ச்சியோடு திருப்பாவை என்ற பாசுரத்தில் இந்த உண்மை விளக்கப்பட்டிருக்கிறது என்று அறியும்போது பெண்களைப் பற்றி, நமது அன்னைகளாகவும், சகோதரிகளாவும், குடும்பத்தைக் காப்பவர்களாகவும் பெண் மக்கள் ஆற்றும் தொண்டு எவ்வளவு சிறந்தது என்று விளங்கும்.
-----------அருள் தந்தை------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக