Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 20 ஜனவரி, 2015

குறை காணா மனம் :


 " மனிதப்பிறவியின் நோக்கமும் ,கடமையும் உயர்ந்தவை. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் .

குறைகூறுவோரையும் வாழ்த்தி வர வர அவர் தானே உணர்ந்து திருந்த வழி காணலாம். ...

இதற்குப் பொறுமையும் தன்னம்பிக்கையும் தாம் வேண்டும்.

பிறரை குறை கூறி தான் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களது உள்ளத்தில் இது வரை அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த நிலையிலிருந்து கீழே தள்ளப்படுகிறார்கள் .

பிறரிடம் குறை காணும் பழக்கத்தை விட்டு விட்டு பிறரிடம் உள்ள நிறைகளைக் காண வேண்டும்.மனிதனுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைக் காலமோ மிகவும் குறுகியது.

இக்குறுகிய கால வாழ்வில், பிறந்தோர் எல்லாம் வாழ வேண்டும். அதுவும் குறைகளைப் போக்கி நிறைவோடு வாழ வேண்டும்" .

"குற்றமே காணும் குறையுடையோர் வாழ்வினிலே

பெறபயன், சினம்வஞ்சம் பொறாமை வருத்தம் இவற்றால்

முற்றும் இழந்தார் வாழ்வின் இன்பமும்; பிறவிப் பயன்

நற்றவத்தோர் வழிநின்று நல்லனவெலாம் ரசிப்போம் ".

---வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக