Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 21 ஏப்ரல், 2014

தன்முனைப்பின் விளைவு

மனித உடலில் சீவகாந்தம் என்றும், பேரியக்க மண்டலத்தில் வான் காந்தம் என்றும் கூறப்படுவது எதுவோ, அதைப்பற்றி இன்னும் விஞ்ஞானம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மனிதன் இறைநிலையை உணராததால் பேரியக்க மண்டலத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியையும் அதன் நிர்வாகத்தையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவன் செய்யக் கூடியவை சிறு செயலாக இருந்தாலும், நான் அதைச் செய்தேன், அதைச் சாதித்தேன் என்றும், நான் எத்தனை பட்டம் வாங்கியிருக்கிறேன் என்றும், எவ்வளவு செல்வம் வைத்திருக்கிறேன் என்றும் பூரிப்பு அடையும் பொழுது மனிதனிடம் தன்முனைப்பு உண்டாகிறது.
அந்தத் தன்முனைப்பிலிருந்து இரு எண்ணக் கோடுகள் உண்டாகின்றன.

அது, "தான்" என்ற அதிகாரப் பற்றும், "தனது" என்ற பொருள்பற்றும். இவை இரண்டும் ஒரு விசித்திரமான தம்பதிகள். இவர்களுக்குப் பிறந்த துடுக்குத்தனமான பிள்ளைகள்தான் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறுகுணங்கள். இவற்றை, காம, குரோத, லோப மோக, மத, மாச்சரியம் என்று வடமொழியில் கூறுவார்கள். இந்த அறுகுண வயப்பட்டு ஒரு மனிதன் எந்தச் செயல் செய்தாலும் அது நேர்மையாகவும் இருக்காது. நல்ல பயனையும் தராது. இந்த ஆறுகுண வயப்பட்ட மனநிலையில் மனிதன் செயல்படும் பொழுது ஐந்து பெரும் பழிச் செயல்களான பொய், சூது, கொலை, களவு, கற்புநெறி பிறழ்தல் ஆகிய செயல்களைச் செய்கிறான். உயிரை உணராததனால் உணர்ச்சி வயப்பட்ட (Emotional Mood) எண்ணங்களான சினம், பொறாமை, தோன்றி உயிராற்றலை மனிதன் இழக்கின்றான்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக