"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi

தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
புதன், 18 ஜூன், 2014
உயிர்ச் சக்தியின் பெருமை
உயிர்ச்சக்தியின் குறைவினாலேயே வலி, நோய், மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகவே, நாம் நலமாக இருக்க வேண்டுமானால் உயிர்ச்சக்தியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உயிர்ச்சக்தி உடலிலே சரியாக இருக்க வேண்டுமானால், அதைத் தாங்கக் கூடிய சக்தி அதாவது வித்து சக்தியானது போதிய அளவிலேயும் போதிய அழுத்தத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரத்திற்கு மின்கலம் (battery) மாதிரி இருக்கக்கூடியது இந்த வித்து சக்தி. அதையே ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சீவவித்துக்குழம்பு (sexual vital fluid) என்கிறோம். அதை நாம் எந்த அளவு பாதுகாத்து, எந்த அளவு சரியான முறையிலே நாம் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிலே உயிர்ச் சக்தியும் இருக்கும். (the quantity and quality of the life force is what the quantity and quality of sexual vital fluid).
உயிர்ச்சக்தியும், வித்துச் சக்தியும் எவ்வளவில் இருக்கின்றதோ, அது போலவே வாழ்க்கையின் உடல்நலம், மனநலம் அமையும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக