Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 15 ஜூன், 2014

கேள்வி: சுவாமிஜி! பதினெட்டு மாதக் குழந்தையின் வயிற்றுக்குள் 9 மாதக் கரு இருந்ததாக செய்தி வந்தது. இது சாத்தியமாகுமா?


வேதாத்திரி மகரிஷி பதில்:
கருவுற்ற ஐந்து மாதத்திற்குப் பிறகு ஆண், பெண் உறவு கூடாது. இதைப் பற்றிய கல்வி பலருக்குத் தெரிவதில்லை. அதற்காக முற்காலத்தில் பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வைத்திருந்தார்கள். மனைவிக்கு ஐந்து மாத கர்ப்பம் என்றால் கணவன் தாடி வைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணைத் தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அதாவது கணவனுக்கு அக்காலம் சன்னியாசம் ஆகும். இப்பொழுது தாடி வைத்துக் கொண்டு அலுவலகம் செல்ல முடியாது. எனவே அந்தப் பழக்கம் போய்விட்டது.
சமுதாயத்தில் பண்பாட்டு வழிவந்த உண்மை என்ன வென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உடலுறவு கொண்டால் கருவிலுள்ள குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படும். இதன் விளைவாக ஊனமுற்ற குழந்தை பிறக்கலாம். கர்ப்பப்பைக்குப் பலவீனம் ஏற்படும். விந்து சக்தி ஜீரணமாக முடியாது. அத்தகைய ஆற்றல் பெற்றது விந்தணுக்கள். அவை தாய் வயிற்றில் தேங்கியிருந்து கருவாகி, அக்கரு நகர்ந்து சென்று கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் கருப்பைக்குள் தங்கிவிட்டால், அங்கு அது முளைத்துவிடும். அரிதாக இவ்வாறு நடந்து இருக்கும். எனவே பண்பாட்டு வழிவந்த ஆண், பெண் உறவுக்கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக