Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 9 மார்ச், 2014

எல்லாமே பிரம்மம்...

அருட்தந்தை அவர்கள் அன்பர்களுக்கு எழும் சந்தேகங்களை ஆழமாகவும்,எளிமையாகவும்.நகைச்சுவையாகவும் சொல்வதுண்டு அப்படி ஒரு நிகழ்வு இதோ..
...
பிரம்மஞான வகுப்பு.
அருட்தந்தை விளக்கம் அளிக்கிறார்.

அருட்தந்தை : எல்லாமே பிரம்மம்... எனவே உயிர்க்கொலை கூடாது...

இதை கேட்ட அன்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம்...

அன்பர் : இந்த உலகத்தில் எல்லாமே பிரம்மம்...ஆகவே எதையும் கொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள்...
இப்படி நினைப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல் இருக்கிறது...!

அருட்தந்தை : எப்படி..?

அன்பர் : எடுத்துகாட்டாக,என் மனைவி உறங்கிக் கொண்டு இருக்கிறாள்..அவளருகில் ஒரு தேள் ஊர்ந்து போகிறது...நான் அதைப் பார்த்துவிடுகிறேன்..என்ன செய்வது..? மனைவியை எழுப்பினால் அசைவாள்.. அது தேள் மீதுபடும்..தேள் கொட்டிவிடும். தேளை அடிக்கலாம் என்றால் தேளும் பிரம்மம்...உயிர்க் கொலை கூடாது என்கிற தத்துவம் இடிக்கிறது..

இப்ப நான் என்ன செய்றது..?
( அவையில் சிரிப்பலை )

அருட்தந்தை வழக்கமான தம் குறும்புச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்:

அருட்தந்தை : நல்ல கேள்வி..தேளும் பிரம்மம்...மனைவியும் பிரம்மம்...என்ன செய்வது.? ஒரு நீண்ட குச்சியை எடுத்துத் தேளை அப்புறபடுத்துங்கள். எச்சரிக்கையாக ஒரு கோணிப்பையை எடுத்து அத்தேளின்மீது வைத்து அழுத்திப் பிடியுங்கள்.பத்திரமாக,வெளியே கொண்டு போய் அதைப் போடுங்கள்...(சிறிது நேர மெளனம்..பிறகு சொல்கிறார்)

ஆனால் ஜாக்கிரதை...தேள் என்ற பிரம்மத்தைக் கோணியில் பிடித்து வெளியே வீசுவதற்குப் பதிலாக...
மறந்து போய் மனைவி என்ற பிரம்மத்தைக் கோணியில் பிடித்து வெளியே வீசிவிடாதீர்கள்..!"

(அரங்கத்தில் மீண்டும் சிரிப்பலை.சிரிப்பலை அதிக நேரம் தொடர்கிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக