Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 19 மார்ச், 2014

"மனவளக்கலை".

 
கருமையத்தின் களங்கத்தைக் போக்க மன இயக்கத்தைத் தான் சீர் செய்ய வேண்டும். பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளில் மிகவும் மதிப்புடைய அறிவின் இயக்ககளம் 'மனம்' என்பதாகும். "மனவளக்கலை" என்னும் வாழ்க்கை வளக் கல்வியானது ஐந்து படித்தளங்களைக் கொண்டதாகும். அவை :

1) உடல்நலம் காத்தல்.
2) மன இயக்கத்தை, எண்ணங்களைச் சீர் அமைத்து மனவளம் காத்தல்,
3) கூடி வாழும் மக்களிடையே ஒத்தும் உதவியும் இனிமைகாத்து வாழும் நட்புநலம் காத்தல், ...
4) பழைய வினைப் பதிவுகளால் தரம் குறைந்துள்ள கருமையத்தை நலம் பயக்கும் செயல் முறைகளைத் திட்டமிட்டுச் செய்து தூய்மை செய்தல்,
5) பேரியக்க மண்டலத்தின் உற்பத்தி, இயக்கம், விளைவுகள் அனைத்துக்கும் மூல ஆற்றலான இறைநிலையையும் அறிவையும் உணர்தல்,

என்பனவாகும். இதனை பருவமடைந்த 14 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கற்கலாம். இந்தக் கல்வியானது உரை விளக்கங்களோடு செயல்முறை திட்டங்களும் அடங்கியதாகும். இந்த ஐந்திணைப்பு வாழ்க்கை வளக் கல்வியானது குடும்ப வாழ்வை ஏற்றுள்ள கணவன் மனைவி இருவருக்கும் மிக்க நலமளிக்கும். குடும்ப வாழ்வைத் தவிர்த்து சமுதாயத் தொண்டிற்கே தங்களை அர்பணித்துக் கொண்டு வாழும் இருபால் பிரம்மச்சாரிகளுக்கும் கூட நலமளிக்கும். கல்வி கற்கும் இளைஞர்களுக்கும், நிர்வாகத்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் மன அமைதியையும், திறனையும் அளிக்கும். இந்த ஆன்மிகக் கல்வி மனித குலத்திற்கு வாழ்க்கை விளக்காகும். மனிதன் மனத்தாலும், குணத்தாலும் சீர்மை பெற்று இயற்கை வழிநின்று அறவாழ்வு பின்பற்றி அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ, "மனவளம்" பெற நிச்சயமான செயல்வழி வாழ்க்கைவள விஞ்ஞானம் தான் "மனவளக்கலை".


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக