Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 14 மார்ச், 2014

வேதாத்திரியின் பிரபஞ்சம் :வேதாத்திரியம் !




இறைவனின் இன்னொரு பக்கம்தான் மனிதன் அல்லது மனிதனின் மருபக்கமாக இருக்கும் இறைவனை தெளிவு படுத்துவதுதான் 'வேதாத்திரியம்'...

தவம் செய்வதற்கு பிரம்மச்சரியம் அவசியம் என்பதை மாற்றி ஒருவனுக்கு உடலும் உயிரும் இருந்தால் மட்டும் போதும் என்பதை போதிப்பது வேதாத்திரியம்

பக்தி எதையும் எடைபோடாது ஆனால் ஞானம் எதையும் எடைபோடாமல் விடாது.
எந்த ஒன்று எல்லாவற்றிலுமே இருக்கிறதோ அந்த ஒன்றில் எல்லாமே உள்ளது. அதுதான் இறைநிலை (இறைவன்) என்ற தெளிவு.

எளிய முறை தியானம் என்பது தனக்குள்ளேயே தான் இறங்குவது. தவம் எனபது தன்னை தனக்கு அறிமுகப்படுத்துவது. புறத்தே அலையும் மனத்தை அகத்தே உள்ள காந்த அலைமீது குவித்து நிறுத்தி நிலைபெறச்செய்வது . இதுவே எளிய முறை குண்டலினியோகம்.

அறிவின் மூலத்தோடு இணைவது தவம். அறிவின் வழிநடந்து கொளவது அறம். இறை உணர்வும் அறநெறியுமே மனிதனை மேம்படுத்தும்.



- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக