Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 26 மார்ச், 2014

கேள்வி : சுவாமிஜி, கருமையம், மனம், உள்ளம், நெஞ்சம், அகம், ஆன்மா இவற்றின் வேறுபாட்டை விளக்க வேண்டுகிறேன்.


 மகரிஷியின் பதில் : (1) தூல உடலுக்கு (Physical body) மையமான விந்து நாதம், (2) சூக்கும உடலுக்கு (Astral Body) மூலமான உயிர்த்துகள்கள் (3) (Causal Body) மூலமான சீவகாந்தம் இவை மூன்றும் இணைந்தது தான் கருமையம் (Genetic Centre) உயிரினத்தின் பெருமையும், சிறப்பும் இந்தக் கருமையத்தில் தான் அமைந்துள்ளது.

உயிர்மையத்துள் அமைந்துள்ள அறிவானது உயிரின் சுழற்சியால் எழும் விரிவலையான காந்த அலை மூலம் புலன்கள் வழியாகப் பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அந்த அறிவையே மனம் என்கிறோம்.

அகம் என்பதும், நெஞ்சம் என்பதும், உள்ளம் என்பதும், ஆன்மா (Soul) என்பதும் கருமையத்தையே குறிக்கும். மனிதன் உடலாலும், மனத்தாலும் செய்யும் செயல்கள் அனைத்தும் பதிவாகி, வித்தில் மரம் போல் இருப்பு வைக்கப்படும் இடம் கருமையம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக