Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 23 செப்டம்பர், 2013

மெய்யுணர்ந்த வாழ்க்கை நெறி

செயலுக்கு விளைவு என்பதை மனிதனால் மாற்றமுடியாது. விளைவு நலமாக அமையும் செயல்களைத் தான் மனிதன் செய்ய வேண்டும். செயலுக்கும் விளைவுக்கும் தொடர்புணர்ந்து வாழ்வதே "மெய்யுணர்ந்த வாழ்க்கை நெறி".
...
செயல் ஒன்றை செய்து விட்டு விளைவு தனக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று கேட்டால் இயற்கை கொடுப்பதில்லை.
செயல் செய்வது மனிதன் விளைவாக வருவது இறைநிலை.
செயலை தனது விருப்பம் போல செய்து விட்டு விளைவு தனக்கு சாதகமாக வருமா என்றால் வராது.

" எந்த செயல் செய்தாலும் அதற்குரிய ஒரு விளைவு உண்டு" என்பது இயற்கைச் சட்டம்.

செயலுக்கு விளைவு உடனேயோ , இன்றோ, நாளையோ,ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ , ஒரு வருடத்திலோ, பல வருடங்கள் கழித்தோ அல்லது அடுத்த தலைமுறையினருக்கோ வரலாம்.

மனிதனுக்கு வரக்கூடிய இன்பமோ துன்பமோ , இலாபமோ நட்டமோ, புகழோ இகழோ செய்யும் செயலுக்கேற்ப இன்பம் என்னும் வெகுமதியாகவும் ,துன்பம் என்னும் தண்டனையாகவும் வந்து கொண்டிருக்கிறது.

இறைநிலை எப்போதும் மனிதனுக்கு துன்பத்தை கொடுப்பதில்லை. மனிதனுடைய தவறான செயல்களே அவனுக்கு துன்பமாக வருகின்றன.

செயல் விளைவு நீதியை உணர்ந்து செயல் புரிந்தால் மனிதன் வாழ்வில் வெற்றியும் ,அமைதியும் ,இன்பமும் பெற முடியும் .

--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக