Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 21 செப்டம்பர், 2013

குரு காணிக்கை



நமது மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உலக அமைதி பற்றி தொடர்ந்து தொண்டாற்ற கடமை உண்டு. காலையில் எழுந்தவுடன் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று ஒன்று முதல் மூன்று தடவை வரை அவரவர்கள் விருப்பம் போன்று கூறி உலகை வாழ்த்தி வாருங்கள்.

எனக்கு ஞானாசிரியன் என்ற முறையிலும் சங்க நிறுவனர் என்ற தகுதியிலும், அன்பர்கள் ஏதோதோ அன்பளிப்புகளை ஆர்வத்தோடு, உள்ள மகிழ்ச்சியோடு அளித்து இன்புறுகின்றார்கள். பாராட்டுகிறேன், மனநிறைவோடு நன்றி செலுத்துகிறேன்.
...
நீங்கள் கொடுக்கும் எல்லா அன்பளிப்பிலும் மேலாக, குருகாணிக்கையாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தினால் அதுவே பெருமதிப்புள்ள காணிக்கையாகும். அனைத்து உள்ளங்களிலும், எழும் இவ்வொலி அலை, உலக மக்கள் மனதிலே ஊடுருவி அமைதிக்கு ஏற்ற பணிகளைச் செய்யத் தூண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக