Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 14 செப்டம்பர், 2013

மதங்களின் பெருமை மங்கிய காரணம்



மதங்களைத் துவக்கி வைத்த பெரியோர்கள் முழுமைபெற்றவர்கள் எனினும் பிற்காலத்தில் மதத்தில் வகுத்த நோன்பு முறையை நண்குணர்ந்து மக்களுக்குத் தலைமை தாங்கி விளக்கிக்கூற வழி நடத்த ஏற்ற ஆசிரியத் தலைவர்கள் அரிதாகி விட்டனர். மதபோதனை ஆசிரியர்களை உருவாக்கும் பொறுப்புணர்ச்சியுள்ள நிறுவனங்களும் போதிய அளவு விரிவடையவில்லை. இதன் காரணமாக ஆண்டுகள் செல்லச் செல்ல, அறிவிலும் வாழ்க்கை நெறியிலும் உயர்வடையாத பலர், மத ஆசிரியர் பொறுப்புகளை ஏற்றனர். அத்தகையவர்கள் மக்களை அவர்கள் ஆசைக்கு உட்படுத்தி அடிமைகளாக்கி மதத்தின் பெருமையினை மங்கச் செய்து விட்டனர். உண்மை உணர்ந்து அருட்பணியாற்றும் சில தலைவர்கள் இந்நிலை கண்டு வருந்துகின்றனர்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக