Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

அறிதுயில் ஆழ்நிலை விழிப்பு


.
"மனித மனம் பொதுவாக ஐம்புலன் உணர்வுகளிலும் "இன்ப வேட்பு", "துன்ப வெறுப்பு" இவைகளில் மாத்திரம் பழகியிருப்பதால் "நுண்-மாண்-நுழைபுலன்" அறிவு (Perspicacity) தெளிவாக வெளிப்படாமல் மனிதனிடம் உள்ளடக்கமாகவே இருக்கிறது.
.
நாள்தோறும் காலை மாலை செய்து வரும் "அகத்தவச் சாதனை" எனும் உளப்பயிர்ச்சியின் (Simplified Kundalini Yoga) மூலம் மன அலைச்சுழல் (mind frequency) விரைவு குறையக் குறைய, ஒரு வினாடிக்கு ஒன்று முதல் எட்டு வரையில் இயங்கும் தீட்டா, டெல்டா அலை நிலை (Wave length)கட்கு கொண்டு வந்தால் தான், நுண்-மாண்-நுழைபுலன் Perspicacity எனும் Super-active Transcendental state of Consciousness அறிதுயில் ஆழ்நிலை விழிப்பு உண்டாகும்.
.
விளைவைக் கணித்த விழிப்பில் முயற்சியோடும் சிந்தனையோடும் செயல்புரியும் பண்பாய் வருவதே நுண்மாண் நுழைபுலனறிவாகும். நுணுகிய சிறப்புள்ள ஊடுருவிக் கூர்ந்துணரும் அறிவாற்றலே அது. இந்த மன நிலையில் சிந்திக்கும் போது தான் புலனுணர்வு அலைகளால் உண்டான பதிவுகளின் அலை மோதுதலிலிருந்து மனம் விடுபட்டு சுதந்திரமாக இயங்க முடியும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக