Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 30 ஜூன், 2013

புத்தர்

உலகத்தில் சிந்தனையாளர்களிடம் தோன்றிய கருத்துகள் சில. கடவுள் என்பது என்ன? உயிர் என்பது என்ன? ஏன் ஏழ்மை என்பது வருகிறது. துன்பமும் மரணமும் ஏன் சம்பவிக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கு விடை காண ஆயுள் முழுவதையுமே செலவழித்த பெரியார்கள் பலர். உதாரணமாக புத்தர் பெருமானுடைய வாழ்க்கையைக் கவனிப்போம். அவரிடம் எழுந்த கேள்விகள் இவையே. உயிர் என்பது என்ன? ஏன் மனிதனுக்குத் துன்பமும், மரணமும் சம்பவிக்கின்றன? ஏழ்மை ஏன் சமுதாயத்தில் நிலவுகின்றது? கடவுள் என்பது என்ன? இவையெல்லாம் அவருடைய கேள்வி. அவருக்கு முடி சூட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன.

புத்தர் நல்ல சிந்தனையாளர். வேதங்களையெல்லாம் படித்தவர். முடி சூட்டிக் கொண்டால் மக்களுடைய துன்பத்தைப் போக்க வேண்டும். என்னென்ன துன்பங்கள் நிலவி வருகின்றன? என்று அவர் சிந்தனை செய்தார்.விசாரணை செய்தார். விசாரணையில் நல்ல தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.தானே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பல இடங்களுக்குச் சென்று பார்க்கலானார். மேற்கண்ட வினாக்களுக்கு மந்திரிகளைக் கூப்பிட்டு விடை கேட்டார். அவர்களுக்கு விடை சொல்லத் தெரியவில்லை. இவையெல்லாம் தெய்வச் செயல் என்றார்கள். தெய்வம் என்பது என்ன? என்ற கேள்வியும் கூடி விட்டது.இந்தக் கேள்விகளுக்கு. மந்திரிகளால் விடை கூற முடியவில்லை. ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. இவற்றையெல்லாம் தெரிந்துதான் ஆக வேண்டும்” என்பதற்காக அவர்களை அடிக்கடிக் கூப்பிட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தார்.இவர் சிம்மாசனம் ஏற வேண்டியவர். இப்பொழுதே இப்படி கேள்வி கேட்கிறார். ஏறிவிட்டால் நம் கதி என்ன? என்று நினைத்த அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு சதி செய்தார்கள்.

அவருடைய தந்தையிடம் போய். “உங்களுடைய மகனின் மனம் சரியில்லை. பைத்தியத்தின் அறிகுறிதான் இருக்கிறது. இவரைச் சிம்மாசனம் ஏற்றுவதைத் தள்ளிப் போடுங்கள். அல்லது இரத்து செய்து விடுங்கள்” என்று மந்திரிகள் தெரிவித்தனர். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? என்று மன்னர் கேட்டார். நடுத்தெருவில் ஒரு கிழவரைப் பார்த்தால், அவரை வீடு வரைக்கும் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறார். நோய் வாய்ப்பட்டவர்கள் வீட்டிற்குப் போய் அவர்களின் உடல்நலம் பற்றி விசாரித்து அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார். மரணம் சம்பவித்த இடங்களில் இவரே நேரில் போய் அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூடிய அளவுக்குக் கீழே இறங்கி விட்டார். இதுவா அரசனுக்கு அழகு? சிம்மானம் ஏறப்போகிற அரசனுக்கு இதுதான் தொழிலா? எங்களையெல்லாம் கடவுள் என்பது என்ன? நீ நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார். இவையெல்லாம் சராசரி நிலையல்ல என்றார்கள்.

தன்னுடைய மகனின் மனப்போக்கைப் புரிந்து கொண்டார் தந்தை. முறையாக அவருக்குப் பதில் அளிக்க வேண்டும், விளங்க வைக்க வேண்டும் என்பதற்காக. “என் மகனைத் தனியாக ஒரு வீட்டில் வைத்து விடுங்கள்.யாரும் அங்கே போகாமலும், அவனும் வெளியே வராமலும் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அவனுக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்கிறேன் என்றார். இதுதான் சரியான வாய்ப்பு என்று கருதி, அவரைத் தனிமைப்படுத்தி விட்டார்கள். அவருடைய மனைவி, குழந்தை தவிர வேறு யாரும் அவரிடம பேச முடியாது.

புத்தரின் சிந்தனை அதிகமாக உயர்கிறது. ஆனாலும் விளக்கம் கிடைக்காமலேயே காலம் சென்று கொண்டு இருந்தது. நான் இப்படிச் சோறு தின்று விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கப் பிறக்கவில்லை. இவ்வினாக்களுக்கு விடை காண வேண்டும். தான் நேரடியாகவே போய் காண வேண்டும். வெளியில் போக வேண்டும் என்று நினைக்கிறார்.வெளியேற முடியவில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு எல்லாரும் தூங்கும்போது ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வெளியேறும்போது, தனது மனையிவிடம் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்.குழந்தையைப் பார்த்தார். சொன்னால், அவள் எழுந்து விட்டால், நம் பயணம் தடைபடும். அதை நினைத்து. பிரிய முடியாமல் கண்ணீர் சிந்தி விட்டு, நடு இரவில் அப்படியே கிளம்பி விட்டார். அதன் பிறகு பல இடங்களில் துன்பப்பட்டப்பின், தன் கேள்விகளுக்கு விளக்கம் பெற்றார். விளக்கம் பெற்றவுடன் மக்களின் சிரமங்களைப் போக்குவதற்கு அதிகாரமோ வேறு எந்த வசதிகளோ இல்லை. அதனால் சந்நியாசம் ஏற்றார்.

இதேபோல பெரிய பெரிய மகான்களுக்கெல்லாம் இக்கேள்விகள் எழுந்திருக்கின்றன, இறந்து போனவர்கள் இல்லத்திற்குச் சென்று அதிகமான விசாரணை செய்கிறார்கள் என்றால், ஏன் சாவு மனிதனுக்கு வருகிறது என்ற கேள்விதான் காரணம். உயிர் என்பது என்ன? உடலை விட்டு ஏன் அது பிரிகிறது? என்ற தத்துவத்தைத்தான் ஆராய்கிறார்கள்.அந்த ஆராய்ச்சிக்கு அக்காலத்தில் விடை கிடைக்கவில்லை.


-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக