Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 19 ஜூன், 2013

குடும்ப அமைதிக்கு உடல் நலமும் – பயிற்சியும்

நோயற்றவாழ்வும் குறைவற்றசெல்வம் இதைத்தான் எல்லோரும் விரும்புகிறோம். நோயற்றஉடலை உடையவர்கள்தான் அமைதியாக மகிழ்ச்சியாக வாழமுடியும். அவர்கள் அறிவும் திறன்பட இயங்கும்.


உடலில் ஏற்கனவே இருக்கிற நோய்களைப் போக்கிக் கொள்வதை சிகிச்சை என்று சொல்வார்கள். அதைவிட சிறந்தத் என்னவென்றால் நோய் வராமலேயே தடுத்துக் கொள்வது (prevention) ஆகும்.


நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. இதில் ஆகாசம் (விண்) உயிராகவும், நிலம் பரு உடலாகவும், மற்ற மூன்று பூதங்களும் இவற்றிற்கிடையே காற்று ஓட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டமாகவும் உள்ளன. மேலும் உயிரில் இருந்து வரும் காந்த அலையும் பரு உடலை பிடித்து வைத்துள்ளது. இதை எல்லாம் சரியாக, முறையாக இருப்பதற்கு அமைந்த பயிற்சி தான் அருட்தந்தையின் எளியமுறைஉடற்பயிற்சி.


எளிய முறை உடற்பயிற்சி 7 கட்டமாக பிரித்து கை, கால், நுரையீரல், கண், கபாலபதி, மகராசனம், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் என உடலின் உள் உறுப்புகளுக்கு பயிற்சியாக அமைகிறது. அதனால் நாம் நோயற்றவாழ்வு வாழ முடியும்.


குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அனைவருக்கும் அது துன்பமாகவும், பொருள் நுட்பமாகவும், நேரமின்மையாகவும் அமையும். அதைத் தொடர்ந்து உறவுகளில் பிரிவு, இப்படி அமைதியிழந்து இருக்கும். அதனால் கடும்பத்தில் அமைதி வேண்டுமானால் உள்ளதை உணர்ந்து அல்லதை வட்டு நல்லதை செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக எல்லோரும் எளியமுறை உடற்பயிற்சி செய்து சிறப்புடனும் அமைதியுடனும் வாழ்வோம்.


நாம் வாழும் காலத்தில் உடலையும் மனதையும் சரிபடுத்திக்கொண்டால் நமக்கு பின்னால் பிறக்கக் கூடிய குழந்தைகள் ஆரோக்கியமான கட்டமைப்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகிற்குத் தருவதற்கு நாம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று அமைதியாக வாழ்வோமாக.
 
                                                                                            -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக