Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 19 ஜூன், 2013

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்


கணவன்-மனைவி, அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் எனப்படுகிறது. பொருள் ஈட்டும் திறன் வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக நிறைவாக நன்கு நடைபெறும். குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது. வயது முதிர்ந்தவர்களால் (பெற்றோர்) பொருள் ஈட்ட முடியாது. வாலிபப் பருவத்தினர்கள்தான் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். அதைக் குழந்தைகளும் முதியோர்களும் கூடித் துய்த்துக் குறையின்றி வாழ வேண்டும். இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது. இந்த இயற்கை நியதியானது பெற்றோர் மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும்போது அதைத்தான் குடும்பம் எனகிறோம்.


குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் வருப்பங்களையும் மற்றவ் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை, கணவன்-மனைவி இருவருமே உயிர்பால் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இனபமும் அமையும்.


அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளை பொறுப்போடு நிறைவேற்றவும் ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்றவகையில் கல்வி, ஒழுக்கம், தொழில், திறன், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் கடமை. இதை உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நமது பெற்றோர்களின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் உரிய மதிப்போடு வைத்துக் கொள்வதால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அமையப்பெறுகிறது.


மனிதனுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதிர்வு என்பது இயற்கை நியதி. அதனால் இதை உணர்ந்து தனி மனிதனாக வாழ்வது அரிது. இதனால் உலகில் வாழ்வதற்கு குடும்பம் மிக இன்றியமையாததாகிறது.
                                                                           
                                                                                                -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக