Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 26 ஜூன், 2013

உருவமும் அரூபமும்

புலன்களுக்கு எட்டுகின்ற ஒன்று சத்தியமாக நிலைக்கும் என்றால் அது ஆழ்ந்த மன நிலையைக்கடந்த சிவகளத்திலும் கூட நிலைத்திருக்க வேண்டும்.

எது எப்போதும் நிலைத்திருக்குமோ அதுவே தான் சத்தியம் என்று கொள்ளலாம்.

தோன்றி மறையும் எதுவும் சத்தியமாகாது.

கை கால்களை வைத்துக்கொண்டு புலன் சார்ந்த நிலையிலே தியானிக்கும் போது தெரிகின்ற உலகமும் உடலும், மனோ நிலையை கடக்கும் போது நிலைப்பதில்லையே... அப்படி எனில், அந்த உடல் சத்தியமானது அல்ல என்று ஆகிறது.

உடல் என்ற ஒன்றை மையமாகக்கொண்டே தான் நமக்குள் உலகமே சத்தியம் என்ற எண்ணம் வருகின்றது. எப்போது அந்த எண்ணத்தின் மூலமான மௌனத்தோடு ஒன்றுகிறோமோ அப்போதே தியானிப்பவருக்கு உடலும் உலகமும் இல்லாது போகிறது.

ஜீவன், பரமாத்மா,உலகம் என்ற பேதம் எல்லாம் அறவே விலகி விடுகின்றது மட்டுமில்லாமல் எப்போதும் நிலையாக நிலைத்து இருக்கும் ஆத்மாவாகிய இறை நிலையோடு கலந்து ஆத்மா ஒன்றே தனித்து ஜொலிக்கிறது.

நாம் காணும் உலகத்தை முழுமையாக நாம் ஒதுக்கி விடமுடியமல் இருப்பதற்க்குக் கூட,இறை நிலையிலே இருந்து தான் இந்த உலகம் என்ற எண்ணம் தோன்றுவதால் தான்.

எப்போது இறை நிலையோடு கலந்து நின்று ஆழ்ந்த கருணை நிலையை உணர்ந்து, அந்த இருப்பிலே இருந்து அசைகிறோமோ அப்போது தான், புறத்தோற்றத்திலும் கூட கருணையோடு வாழ்த்தும் பேரன்பு ஒருவருக்குக் கிட்டுகிறது.

புலன்களால் பெறப்படும் புறத்தோற்றத்திலே அலட்சியம் என்கிற எண்ணம் இல்லாமல் இருப்பதும், அகத்திலே உள்ள ஆன்ம நிலையை விட்டு விலகாது நிலைப்பதும் ஞானம் பெற்றிருப்பதற்குரிய தன்மையாக இருக்கிறது.

எதனை எப்படி புலன்களால் நோக்கினாலும், புலன்களால் ஏற்படும் அனுபவங்கள் எல்லாம் நிலைத்து நில்லாத ஒன்றாக போவதும், ஆன்மாவாகிய இறை நிலையிலே வேறெந்த எண்ணமும் நிலைக்க முடியாத நிலை உணர்வதும் அத்வைத நெறி ஆகும்.

முக்கியத்துவம் எதற்க்குத் தருகிறோம் என்பதே தான் முழு விசயமும்.

த்வைத நெறி என்பதை ஆமோதித்தவர்கள் எல்லாம், புலன்களால் காணும் உலகம் நிஜமே என்றும், உலகம் மாயை என்று சொல்லப்படுவதை ஏற்க மறுப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்...

ஆனால், எது நிலைக்காதோ அதை மாயை என்று விலக்கி, நிலையான ஒன்றோடு கலந்தது தான் அத்வைத நெறியாக இருக்கிறது. அத்வைத நெறி என்பதிலே அனைத்து நெறிகளும், இறைவனோடு கலத்தல் என்ற இடத்திலே பேதமற்று ஒன்றாகின்றது. அந்த இடமே மௌனம், அதுவே மோட்சம். அதுவே பிரம்மமும். அதுவே சிவம்.

குருவென்ற ஒரு எண்ணம்( என்பதை) இறை வெளியோடு தவமியற்றும் போது கொண்டு வந்தால்,குரு என்கிற உருவம் எடுப்பது எண்ணத்தினாலே என்பதும், குருவே என்றவுடன் எண்ணமற்று கலத்தலே என்று தியானிப்பவர் இறையோடு கலந்து ஒன்றாவதும் அனுபவம். எப்படி எண்ணம் நிலைக்காதோ அதே போல உருவமும் நிலைக்காது போய்விடுவதும், அரூபமான இறை நிலையோடு கலந்த நிலையிலே குருவும் அரூபத்திலே நிலைத்து நீடிப்பதும் தெளிவாகிறது..

குருவானவர் இயல்பூக்க நியதியின் படி, சிவ நிலையாம் அரூப நிலையோடு கலந்து நின்று அண்டுவோரை அந்த தன்மையில் இருந்தே ஆட்கொள்கிறார்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக