Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 26 ஜூன், 2013

செடியைக் கூட வாழ்த்துங்கள்

* உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடல் மட்டும் தான் பாய்கிறது. ஆனால், எண்ணங்களோ பிரபஞ்சத்தின் எங்கும் பாயக்கூடியது.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போனால், போகத்திலேயே மனம் நாட்டம் கொண்டிருக்கும். அதனால் பிறவித்தொடர் நம்மை விட்டு என்றும் நீங்காது. தேவைகளை முடிந்தவரை சுருக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

*எல்லாப் பொருள்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படி காணக்கூடிய அளவு அறிவிலும் உயர்வு உண்டாகும்.

* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனைச் சினம் அணுகவில்லை என்றால் அவன் ஞானம் பெற்றுவிட்டான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாமே தவிர, எப்போதும் சினத்தோடு இருப்பது முறையல்ல. போலியாகக் கோபம் கொள்ளும்போது, மனதில் சிறிதும் சலனம் கூடாது. எதிராளியைத் திருத்துவது மட்டுமே அதன் நோக்கமாகும்.

* ஒரு செடியைப் பார்த்தால் கூட வாழ்க வளமுடன் என்று உளப்பூர்வமாக வாழ்த்துங்கள். உலகத்திற்கு நன்மையான செயல்களைச் செய்து அதனால் அனைவரும் மனநிறைவு பெற வேண்டும் எப்போதும் வாழ்த்துங்கள்.

* உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையிலே கண்ணியம் என்று இருப்பதே நல்லோர்களின் பண்பாகும்.

--வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக