Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 4 ஜூலை, 2015

குண்டலினியோகப் பயிற்சியின் மூலம் ஆறு வகைமனோ நிலைகளை சீரமைத்துக்கொள்ளலாம்

 "காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வடநூலார் குறிப்பிட்டுள்ள ஆறு வகை மனோ நிலைகள் "அறுகுணம்" என்று வழங்கப் பெறுகின்றன. இவற்றை அவா (பேராசை), சினம், கடும்பற்று, பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்று முறையே தமிழில் கூறப்படுகின்றன. இவை எல்லா உயிர்களிடத்தும் உள்ளன. மனிதனிடம் இம் மனோ நிலைகள் எழுச்சி பெறுகின்ற போது, அவன் உணர்ச்சி மயமாகிவிடுவதால், தீய செயல்களைப் புரிந்து விடுகிறான்.
.
"அகத்தவப் பயிற்சியாலும் ( Simplified Kundalini Meditation ) - தற்சோதனை ( Introspection )" என்ற தன்னை ஆராயும் பயிற்சியின் மூலமாகவும் தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால், இந்த ஆறு மனோ நிலைகளில்,
.
1] அவாவை (பேராசையை) - நிறைமனமாகவும்,
2] சினத்தைப் - பொறையுடைமையாகவும்,
3] கடும்பற்றை - ஈகையாகவும்,
4] பால் வேட்பைக் - கற்பாகவும்,
5] உயர்வு தாழ்வு மனப்பான்மையை - நேர் நிறை உணர்வாகவும்,
6] வஞ்சத்தை - "மன்னிப்பாகவும்" சீரமைத்துக் கொள்ளலாம்.
.
தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக