Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 19 ஜூலை, 2015

அணுவினிலே உள்ள ஆற்றல் பிறந்ததெங்கே ?

 "இறைநிலை ஆதியானது. அது தன்னைத்தானே அழுத்தி நொறுங்கிக் கொள்ளும்போது (Self Compressive Pressure Force) , இறைத் துகளாக ஈதர் என்னும் நுண்துகளாக (Primary Energy Particle) மாறுகின்றது. தன்மாற்றம் பெறுகின்றது. ஒவ்வொரு துகளைச் சுற்றியும் இறையாற்றல் சூழ்ந்தழுத்திக் கொண்டிருப்பதனால், அவையெல்லாம் எப்பொழுதும் தற்சுழற்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்தத் தற்சுழற்சி தான் இறைத்துகளுக்குக் காந்த ஆற்றலை உண்டு பண்ணித் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

.
இறைநிலையின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், இறைத்துகளை (Ethereal Particle) ஆங்காங்கு ஒன்றிணைக்கும் விளைவாகவே இருக்கின்றது. இவ்வாறு தோன்றும் சிறு முடிச்சுகள் அணுவென்ற (Atom) பெயர் பெறுகின்றன. ஒவ்வொரு அணுவும் இறைத்துகளின் கூட்டமைப்பேயாகும். இறைத்துகள்கள் ஒவ்வொன்றும் சுழன்று கொண்டே இருப்பதனால், அவற்றின் கொத்தியக்கமான அணுவும் தற்சுழற்சி உடையதாகவே இருக்கின்றது. இந்தத் தற்சுழற்சியினால் அணுவுக்குள் அடங்கிய இறைத்துகள்கள் மேலும் மேலும் காந்த அற்றலைப் பெற்று, தற்சுழற்சி விரைவு மீறி அவைகளுக்குள்ளாக ஏற்படக்கூடிய விலக்கும் வேகமாக மாறுவதால், அணுக்கள் எப்பொழுதுமே கரைந்து கொண்டே இருக்கும். அவைகளிலிருந்து வெளியேறும் நுண்ணலைகள் (ஈதர் என்னும் பரமாணுக்கள்) காந்த ஆற்றல் பெற்றவைகளாகவே இருக்கும்.

.
இறைநிலையோ ஒரு பாய்மப் பொருளாகும் (Fluid). அதிலிருந்து தோன்றுகின்ற இறைத்துகளும் அவ்வாறே. எந்த இறைநிலையிலிருந்து தன்மாற்ற விளைவான நுண்துகள் பரமாணு ( Ethereal Particle ) தோன்றியதோ அதுவே பரமாணு நிலையிலிருந்து காந்த ஆற்றல் பெற்ற பிறகு, அழுத்தம் முதலான ஐந்துவகைத் தன்மாத்திரைகளாக மாறி, இறைநிலையாகிவிடுகிறது.

.
இப்பொழுது பிரபஞ்சத்தை முழுமையாக ஆராய்ந்து பார்ப்போம். இறைநிலை ஒன்றுதான் பேராதாராப் பெருவெளி என்ற சக்தியாகும். அதன் தன்மாற்றம்தான் இறைத் துகள்கள் (ஈதர்) முதற்கொண்ட பேரியக்க மண்டலக் காட்சிகள் அனைத்துமாகும். மீண்டும் அவைகளையெல்லாம் காந்த ஆற்றல் பெற்ற அலைத்துகள்களாகித் தன்மாற்றம் பெற்று இறைநிலையில் இணைந்து விடுகின்றன.

.
இந்த உண்மையை நோக்கும்போது இறைநிலையின் ஒரு நுண்பகுதிதான் நாமும் என்ற உணர்வு தெளிவாக உண்டாகிறது. எனவே மனித அறிவின் சிறப்பு பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டு வாழத் தகுதியாக இருக்கிறது. பிரபஞ்சத்தையும் தன்னையும் உருவாக்கியுள்ள பேராற்றலான தெய்வநிலையை மறக்க முடியாது. மறந்து வன்முறைகள் மூலம் தவறான செயல்கள் செய்து ஒருவர் பிறருக்குத் துன்பம் அளிக்கவும் முடியாது. தனிமனிதன் வாழ்விலும் உலக சமுதாய வாழ்விலும் அமைதியே நிலவும். இந்தத் தெளிவிலே அன்போடும் கருணையோடும் நம்மோடு வாழும் ஜீவன்களின் உடலுக்கும் மனதுக்கும் துன்பமளிக்காது, எந்த ஜீவனுக்கும் உள்ள துன்பத்தை முடிந்த வரையில் போக்கிக் கொண்டு, அறிவுத் தொண்டாற்றி வாழ்வோம் என்ற முடிவை மறவாமல் செயலாற்றுவோம். அதே பேரின்ப நிலையில் அமைதி பெறுவோம்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும்நுண் விண்ணாம்.
நிறைவெளியில் விண்சுழல நெருக்குகின்ற உரசல்,
நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்.
மறைபொருளாம் காந்தம்தன் மாத்திரைகள் ஐவகை.
மலைக்காதீர் விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்.
முறையாய்அக் காந்தஅலை மனமாம்உயிர் உடல்களில்.
மதிஉயர்ந்திவ் வுண்மைபெற மாபிரம்ம ஞானமாம் !".

.
விஞ்ஞானமும் - ஞானமும் :

"அறிவை அகண்டாகாரத்தே செலுத்தி,
அணுவினிலும் நின்றொடுங்கி, ஆழ்ந்தாராய்ந்து,
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்,
அறிந்துவிட்டீர்! விஞ்ஞான நிபுணரே! நம்
அறிவு எது? எங்குளது? அந்தமென்ன?
அணுவினிலே உள ஆற்றல் பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றிஒன்றி ஆய்ந்து பாரீர்.
அணுவுக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக