Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 7 ஜூலை, 2015

அலை இயக்கம்

"அலை இயக்கத்தின் மூலமாக எந்தப் பொருளிலும் ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக ஒரு பதிவு ஏற்படும். அந்த பதிவு அதன் தன்மையாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் அதே பதிவு பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாகத் தூண்டும். இவ்வாறு எந்த செயல் செய்கின்றோமோ அந்தச் செயல் வினைப்பதிவாக மாறி நாம் மீண்டும் மீண்டும் அதையே செய்து அதே துன்பத்தையோ, இன்பத்தையோ அடைகிறோம். ஆகவே நாம் எப்பபொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில் அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இதுதான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு.

.
இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் என்ற ஒரு நியதியை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த பொருளும் அணுவினுடைய கூட்டுதான். ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து அலை வீசிக்கொண்டே இருக்கிறது. எதிர்படும் ஒவ்வொரு அலையிலும் பதிவாகிறது. அந்தப் பதிவு மீண்டும் மீண்டும் அதன் தன்மையாக (Character) மாறிவிடுகிறது. இதையெல்லாம் பார்க்கும்பொழுது நாம் எந்த செயல் செய்தாலும் எந்த எண்ணம் எண்ணினாலும் அது நம் சொத்தாக பதிவாகி விடுகின்றது. அதற்கேற்ப விளைவு வருகிறது. ஒரு மனிதனை நினைத்து அவன் நல்லவன் நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அவனை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அளவு நம் அலையே ஒரு நல்ல அலையாக மாறி, அது செல்லும் இடமெல்லாம் அதே விளைவைத் தரும். எனவே நல்ல எண்ணம் உற்பத்தி செய்து கொள்ள மனதிற்கு அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga) வேண்டும். நல்ல செயல் செய்ய அறநெறி வாழ்வு வேண்டும். இந்த இரண்டின் வழியேதான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும்".
 .
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசினால்
உள்ளொளி தீயாகி உடலைக் கெடுத்து விடும்".

.
"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக