Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுவாமிஜி அவர்களே! “வடக்கில் தலை வைத்து வாழ்ந்தவர்கள் இல்லை” என்கிறார்களே, அது ஏன்?


பதில்: பூமியை சரிபாதியாகப் பிரித்தால் அதன் பூமத்திய ரேகையில் (Equator) இருந்து வடக்குப் பகுதியில் கெட்டிப் பொருள் அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியில் கெட்டிப் பொருளைவிட லேசான நீர் பகுதி அதிகம். அதனால் காந்த ஈர்ப்பு சக்தியின் திணிவு (Intensity) வடக்குப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
வடக்கில் தலை வைத்துப் படுப்பதால் ஈர்ப்பு சக்தி காரணமாக உடல் முழுவதும் உள்ள சீவகாந்த சக்தி தலைப் பக்கமாக ஈர்க்கப்படும். அது நுண்மையான மூளைப்பகுதிக்கு நலனளிக்காது என்பதால் வடக்கில் தலைவைத்துப் படுக்கலாகாது என்கிறார்கள்.
நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும் நம் எடையை கால் பகுதி தாங்கிக் கொண்டுள்ளது. சீவகாந்த சக்தியின் ஈர்ப்பு உடலில் கால்பகுதி வழியாக பழகிவிட்ட ஒன்றானதால் அதனால் பாதிப்பு இல்லை. அதனால் கால் பகுதியை வடக்கிலும், மூளைப் பகுதியைத் தெற்கிலும் வைத்துப் படுப்பது நலமளிக்கும் என்பதை விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக