Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 5 மே, 2014

மனவளக்கலைஞன்:



மனம் உருவான விதத்திற்குக் காரணமாக இரண்டடுக்கு வினைப் பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன. பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செய்தோமோ, அனுபவித்தோமோ, நினைத்தோமோ அவை அனைத்தும் நம்மில் பதிவாகி இருக்கின்றன. இதை மேலடுக்குப் பதிவு என்று...ம் "பிராரப்த கர்மம்' என்றும் சொல்லலாம். அதற்கு முன்னதாக இந்த மனதுக்கு இன்னொரு பதிவு இருக்கிறது. அதுதான் கருவமைப்புப் பதிவு. முதன் முதலில் தோன்றிய மனிதன் முதற்கொண்டு நமது பெற்றோர் வரையிலே எங்கேயும் இடைவிடாமல் கருவமைப்பு ஒரு தொடராக வருகிறது.

அத்தனைப் பிறவிகளிலும் எண்ணிய எண்ணங்கள், செய்த செயல்கள், அனைத்தும் பதிவாக இருக்கின்றன. இந்தப் பதிவைத் தான் 'சஞ்சித கர்மம்' என்றும் 'பழவினை' என்று கூறுகிறார்கள். இப்பதிவுகளை வைத்துக் கொண்டு வாழுகின்ற போது, மனதிற்கு இதே வகையான வினைகளைச் செய்ய தூண்டுதல் வருகிறது. அதனால் மீண்டும் துன்பம் வருகிறது. நோய், மூப்பு, வறுமை, மரணம், என்ற வலைகளில் சிக்கி மனிதன் வாடுகிறான்.

ஆனால் மனிதன் வேண்டுவது நிம்மதி, மன அமைதி. இதற்கு என்ன வேண்டும்? பழைய பதிவுகளினால் ஏற்படுகின்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு அறிவின் விழிப்பு நிலையோடு செயலாற்ற வேண்டுமெனில் மனதிற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. முறையான அகநோக்குப் பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கான ஆர்வத்துடன் கூடிய முயற்சிதான், அந்த ஆற்றலை தருகின்ற ஒரு பயிற்சி தான் "தவம்" (Meditation) என்றும், "தியானம்" என்றும் "யோகம்" என்றும் கூறி சித்தர்கள், மகான்கள் நம்மை வழி நடத்தினார்கள். அதைத்தான் "மனவளக்கலை" என்ற பெயரில் இப்போது நாம் பயில்கிறோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக